herzindagi
image

தினமும் காலையில் ஒரு சிட்டிகை பெருங்காயம் சாப்பிட்டு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

பெருங்காயம் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளைத் தரக்கூடியது. காலையில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தைச் சாப்பிட்டு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம். 
Editorial
Updated:- 2025-01-17, 18:59 IST

பெருங்காயம் பல மருத்துவ நன்மைகள் கொண்டுள்ளது. பெருங்காயம் பல உடல்நலப் பிரச்சினைகளைக் குணப்படுத்த உதவுகிறது. தினமும் காலையில் ஒரு சிட்டிகை பெருங்காயத்துடன் தண்ணீர் கலந்து குடித்தால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பெருங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இதை ஒரு பயனுள்ள இயற்கை டானிக்காக மாற்றுகின்றன. அதன் நன்மைகள் பற்றி டெல்லியின் கிளவுட்னைன் குழும மருத்துவமனைகளின் மூத்த நிர்வாக ஊட்டச்சத்து நிபுணர் கரிமா சவுத்ரி தகவல் பகிர்ந்துள்ளார்.

 

மேலும் படிக்க: ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க தேங்காய் போதும்; எப்படி தெரியுமா?

ஒரு சிட்டிகை பெருங்காயத்தில் இருக்கும் நன்மைகள்

 

ஒரு சிட்டிகை பெருங்காயம் சாப்பிட்டு தண்ணீர் குடிப்பது எடை குறைக்க உதவும். உண்மையில் இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, மேலும் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும் போது அதிக கலோரிகளை எரிக்கிறது. இது உடல் உணவை சேரிக்க வைக்க உதவுகிறது. எனவே காலையில் பெருங்காயம் சாப்பிட்டு தண்ணீர் குடிப்பது உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
இது சருமத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது. பெருங்காயத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன, முன்கூடிய வயதான செயல்முறையைத் தடுக்கிறது. இது உங்கள் சருமத்தை இளமையாகவும் பளபளப்பாகவும் காட்டுகின்றன.

asafoetida


Image Credit: Freepik


  • குளிர்காலத்தில் சளி மற்றும் இருமலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். உண்மையில் இதில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் சுவாசப் பிரச்சினைகளைக் குறைத்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.
  • இது உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் குளிர்காலத்தில் தசை வலி, பிடிப்புகள் மற்றும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
  • பெருங்காயம் சாப்பிட்டு தண்ணீர் குடிப்பதும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி மற்றும் பிடிப்புகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. செரிமான பிரச்சனைகளைக் குறைப்பதிலும் இது உதவியாக இருக்கும். இது வாயு, மலச்சிக்கல், அமிலத்தன்மை ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

 

asafoetida powder 1

Image Credit: Freepik

 

பெருங்காயம் சாப்பிடும் முறைகள்

 

  • கட்டி பெருங்காயம் எடுத்துச் சிறு துண்டுகளாக பிரித்துக்கொள்ளவும்
  • அதன்பிறகு ஒரு வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  • வறுத்த பெருங்காயத்தை மிக்ஸியில் போட்டுப் பொடியாக அரைத்துக் கொள்ளவேண்டும்
  • ஒரு சிட்டிகை பெருங்காயம் தூள் எடுத்து வாயில் போட்டு, தண்ணீர் குடிக்கவும்


மேலும் படிக்க: தட்டையான வயிற்றை 10 நாளில் அடைய, 15 நிமிடம் இந்த பயிற்சிகளை வீட்டில் செய்யுங்க

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]