குழந்தைகளைப் பராமரிப்பு என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் சவாலான விஷயம். அதிலும் பருவ கால தொற்றுகள், காய்ச்சல், இருமல், சளி போன்ற பல்வேறு தொற்றுகள் பாதிக்காமல் பாதுகாப்பது என்பது பெற்றோர்களுக்கு மிகுந்த சிரமம் தான். இத்தகைய பாதிப்புகளில் ஒன்றான காது வலி மற்றும் காதில் ஏற்படும் தொற்று பாதிப்பால் குழந்தைகள் என்னென்ன பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்? இதற்கானத் தீர்வு என்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
காது தொற்றால் ஏற்படும் பாதிப்புகள்:
- காது வலி, காதில் சீல் வடிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அலட்சியமாக இருக்கக்கூடாது. பல நேரங்களில் காதுகளில் நோய்த் தொற்று தீவிரமாகும் போது தற்காலிக அல்லது நிரந்தர காது கேளாமை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் செவிப்பறைக்குள் யூஸ்டாசியன் குழாய் அடைப்பு ஏற்பட்டால், நிரந்தரமாக செவிப்புலன் இழப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
- காதுகளில் தொடர்ச்சியாக சீல் வடியும் போது வலி அதிகமாக இருக்கும். இதற்கான சிகிச்சை முறையாக அளிக்கப்படாத போது தான், காதில் அதிக சத்தம் கேட்டுக் கொண்டே இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
- காது நோய்த்தொற்றின் விளைவாக ஏற்படும் பாக்டீரியா தொற்று மூளை மற்றும் முதுகுத் தண்டு உட்பட உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். பல நேரங்களில் மூளைக்காய்ச்சல் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
காது வலியைக் குணப்படுத்த வீட்டு வைத்தியங்கள்:
- காது வலி அதிகமாக இருக்கும் போது வெதுவெதுப்பான நீரைக் கொண்டு காது பகுதிகளில் ஒத்தனம் வைக்க வேண்டும். இந்த சிகிச்சை முறை வலியை தற்காலிகமாக குறைக்க உதவுகிறது.
- காது வலி ஏற்படும் சமயத்தில், மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் வலி மருந்துகளை உபயோகிக்கலாம்.
- காதில் ஏற்படும் வலியைக் குறைக்க வேண்டும் என்றால், நாள் முழுவதும் நிறைய திரவங்களைக் குடிக்க வேண்டும். முடிந்தவரை சூடான தண்ணீரைக் குடிக்கும் போது தொண்டை, காதுகள் மற்றும் சைனஸ் பாதிப்பைக் குறைக்க உதவியாக இருக்கும்.
- காதுகளில் அவ்வப்போது சீல் வடிதல் அல்லது அழுக்குகள் இருந்தால் காட்டன் துணியைக் கொண்டு காதுகளின் வெளிப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

- காது வலி பிரச்சனையை சரி செய்வதற்கு உங்களது உணவு முறையில் பூண்டு அதிகளவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் காதுகளில் நோய்த் தொற்றால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது. இதோடு எதிர்காலத்தில் எவ்வித காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
- குளிர்காலத்தில் வெளியில் செல்வது, நீச்சல் குளங்களில் குளித்தல் போன்றவற்றால் காதுகளுக்குத் தண்ணீர் புகுந்து வலி ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க முயற்சி செய்வது நல்லது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation