உலக மலேரியா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 அன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் மலேரியாவால் தங்கள் உயிரை இழக்கிறார்கள். எனவே, இந்த தினத்திற்கான நோக்கம் மலேரியாவைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதாகும். இன்று, இந்த சிறப்பு நாளில், மலேரியா என்றால் என்ன, அதன் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி நாங்கள் உங்களுக்கு கூறவுள்ளோம். இந்த தகவலை BLK-Max சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இன்டர்னல் மெடிசின் இயக்குனர் டாக்டர் அதுல் பாசின் பகிர்ந்துள்ளார்.
மலேரியா ஒரு ஒட்டுண்ணி தொற்று ஆகும், இது கொசு கடியால் ஏற்படுகிறது. நம்மை கொசு கடிப்பதால் பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணி பரவுகிறது. குறிப்பாக மனிதர்களுக்கு பரவும் மலேரியாவில் 5 வகைகள் உள்ளன. இந்த கொசு கடிப்பதன் மூலம் பிளாஸ்மோடியம் எனும் ஒரு வகை பாக்டீரியா மனித உடலில் நுழைகிறது. அதன் பிறகு இனப்பெருக்கம் செய்கிறது. இந்த பாக்டீரியாக்கள் கல்லீரல் மற்றும் ரத்த அணுக்களை பாதிக்கிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை நோய்வாய்பட வைக்கிறது. சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது உயிருக்கு கூட ஆபத்தை ஏற்படுத்தும்.
இதுவும் உதவலாம்:மலேரியா அண்டாமல் இருக்க நீங்கள் செய்யவேண்டியவை
மேலே கூறியபடி மலேரியாவில் 5 வகை உண்டு.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர் முற்றிலும் சுயநினைவு இழந்து விடுகிறார். மயக்கத்தில் அவர் என்ன சொல்கிறார் என்பது கூட அவருக்கே தெரியாமல் போய் விடும். பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் குளிராக உணர தொடங்குவார்கள். மேலும் அவர்களுக்கு தலைவலி மற்றும் வாந்தியும் ஏற்படும்.
வைவாக்ஸ் ஒட்டுண்ணி பெரும்பாலும் பகலில் மட்டுமே கடிக்கும். இந்த கொசு தீங்கற்ற டெர்டியன் மலேரியாவை உற்பத்தி செய்கிறது, இது கடித்த மூன்றாவது நாளில் இருந்து, அதாவது 48 மணி நேரத்திற்குப் பிறகு அதன் வீரியத்தை காட்டத் தொடங்குகிறது. இதில், இடுப்பு, தலை, கை, கால்களில் வலியுடன் பசியின்மை மற்றும் நடுக்கத்துடன் அதிக காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
இந்த வகை மலேரியாவும் தீங்கற்ற டெர்டியனால் ஏற்படுகிறது.
இது குவார்டன் மலேரியாவை உருவாக்குகிறது, இதில் நோயாளிக்கு ஒவ்வொரு நான்காவது நாளிலும் ஒருமுறை காய்ச்சல் இருக்கும். ஒரு நபருக்கு இந்த நோய் இருந்தால், அவரது சிறுநீரில் இருந்து புரதம் வெளியேறத் தொடங்குகிறது, இதன் காரணமாக உடலில் புரதச்சத்து குறைபாடு மற்றும் வீக்கம் தொடங்குகிறது.
இது தென்கிழக்கு ஆசியாவில் பொதுவாகக் காணப்படும் முதன்மையான மலேரியா ஒட்டுண்ணியாகும். இந்த மலேரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சளியுடன் காய்ச்சலும் வரும். தலைவலி, பசியின்மை போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
அதன் அறிகுறிகள் பொதுவாக கொசு கடித்த சில நாட்களுக்குப் பிறகு தோன்றும்.
சரியான நேரத்தில் சிகிச்சையளிக்க வேண்டும் இல்லாவிட்டால், சிறுநீரில் இரத்தத்துடன் கடுமையான தொற்று உண்டாகும் மற்றும் உடலில் பல்வேறு உறுப்புகள் செயலிழப்பு ஏற்படும்.
இதுவும் உதவலாம்:தினமும் இலவங்கப்பட்டை டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]