தற்போதைய நவீன காலத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாக அசைவ உணவுகள் தான் உள்ளது. அதிலும் சிக்கன் வகைகளை வித்தியாசமான முறைகளில் தயார் செய்து சாப்பிடுகிறார்கள் அல்லது விலையை உயர்ந்த நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் சாலையோர கடைகளில் கிடைக்கும் கோழி இறைச்சிகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். அதிலும் பார்பிக் சிக்கன், பிரைட் சிக்கன், சிக்கன் ரைஸ் சிக்கன் நூடுல்ஸ் சிக்கன் பர்கர் என பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளை தான் சாப்பிடுகிறார்கள். இது போன்ற தவறான உணவு முறை பழக்கவழக்கத்தால் உடல் பருமன், நீரிழிவு நோய், பயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படுவார்கள். அதிலும் பெரும்பாலானோர் சிறிதளவு அசைவ உணவு சாப்பிட்டாலே வாயு தொல்லை ஏற்பட்டு விடும். குறிப்பாக நெஞ்சு குத்தல் முதுகு கூத்தல் மற்றும் கொழுப்பு பிரச்சனையால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது, உள்ளிட்ட பிரச்சனைகள் சிறுவயதினர் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது.
இதுபோன்ற, சிக்கலான நேரங்களில் எப்போதுமே ஆங்கில மருந்துகளை மட்டும் நம்பி இருக்காமல் வீட்டிலேயே சில இயற்கையான பொருட்களை வைத்து நம் உடலை நாமே சரி செய்து கொள்ளலாம் இதில் எந்தவித பக்க விளைவுகளும் வரப்போவதில்லை ஏனென்றால் இவை அனைத்துமே இயற்கையான முறையில் உள்ள பொருட்களால் வீட்டிலேயே நாம் செய்யக்கூடியது. அதிலும் நமக்குத் தேவையான பொருட்களை தேவையான அளவில் சேர்த்து செய்து கொள்ளலாம்.
நெஞ்சு குத்தல், முதுகு குத்தல், வாயு தொல்லையை போக்கும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருட்கள்
- பால்-2 டம்ளர்
- பூண்டு-10
- பெருங்காயம்- சிறிதளவு
செய்முறை
2 டம்ளர் பாலில் பூண்டு பெருங்காயம் சேர்த்து 1 டம்ளர் வரும் வரை காய்ச்சி ஆறவைத்து மிக்சியில் அரைத்து குடித்தால் இரத்த கொழுப்பை கரைத்து, நெஞ்சு குத்தல், முதுகு குத்தல், வாயு தொல்லையை நீக்கும்.
பூண்டின் நன்மைகள்
- இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மசாலாப் பொருளும் ஒருவித மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. எனவே, நீங்கள் எந்த உணவை சாப்பிட்டாலும், அது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். பெரும்பாலான மக்கள் ஒரு உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க பூண்டைப் பயன்படுத்துகிறார்கள்.
- அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் பண்புகள் காரணமாக இது இனிமையான பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் அல்லிசின் எனப்படும் ஒரு சேர்மம் உள்ளது, இது பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இதில் பாஸ்பரஸ், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன.
- இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பூண்டுப் பற்களைப் பச்சையாகச் சாப்பிடுவது இருமல் மற்றும் சளியைத் தடுக்க உதவும். பூண்டை நசுக்கி வெறும் வயிற்றில் உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பூண்டை நசுக்கி குழந்தைகளின் தொண்டையில் தடவுவது சளியால் ஏற்படும் சளியைக் குறைக்க உதவும்.
- பூண்டில் உள்ள அல்லிசின் உள்ளடக்கம் எல்.டி.எல் (கெட்ட கொழுப்பு) ஐ ஆக்ஸிஜனேற்றி, கொழுப்பின் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது.
- இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பூண்டு பற்களை உட்கொள்வது இரத்த உறைவைத் தடுக்கலாம். பூண்டு ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தைப் பராமரிக்கிறது மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- பூண்டு ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் டிஎன்ஏவைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள துத்தநாகச் சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- இதேபோல், வைட்டமின் சி தொற்றுகளைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் கண் மற்றும் காது தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
பெருங்காயத்தின் நன்மைகள்
- சைவ உணவு அசைவ உணவு என எதுவாக இருந்தாலும் உணவின் சுவையை அதிகரிப்பதில் பெருங்காயத்தின் பெரும் பங்கு அமைந்துள்ளது. உடலில் ஏற்படும் கிருமி தொற்றுகள் நுண்கிருமிகளை மலத்தின் வழியாக வெளியேற்ற பெருங்காயம் உதவும்.
- பெருங்காயத்தை தினமும் நான் உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமான பிரச்சனைகள் நொடி பொழுதில் சரியாகும். இதனால் நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஒருபோதும் வராது குறிப்பாக இது நாம் சாப்பிடும் எந்தவித உணவுகளையும் வேகமாக ஜீரணிக்க உதவுகிறது.
- பெருங்காயம் உடலில் உள்ள நரம்புகளில் ஏற்படும் அடைப்பை குறைக்க உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இது உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு தீர்வாக அமையும். இதனால்தான் பெருங்காயத்தை ஆயுர்வேத மருத்துவத்தில் பெருமளவில் பயன்படுத்துகிறார்கள் அந்த அளவிற்கு எக்கச்சக்க நன்மைகளை பெருங்காயம் கொட்டிக் கொடுக்கும்.
- குழந்தைகளுக்கு பெருங்காயத்தை நாம் உணவில் சேர்த்து கொடுப்பதால் குழந்தைகளின் வயிற்றில் உருவாகும் குடல் புழுக்கள் வயிற்று புழுக்கள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை உடனடியாக தீர்க்கும் வல்லமை கொண்டது.
- அதிலும் பெண்களுக்கு பெருங்காயம் பல நன்மைகளை கொடுக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வரும் வயிற்று வலி மற்றும் முகப்பரு முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது.
முக்கிய குறிப்பு: அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் இதனை தவிர்க்கவும்.
மேலும் படிக்க:குடலில் ஒட்டி உள்ள நாள்பட்ட கழிவுகளை ஒரே இரவில் வெளியேற்ற உதவும் கடுக்காய் பொடி தண்ணீர்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil
image source: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation