நெல்லிக்காய் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. ஏனெனில் நெல்லிக்காய் ஆரஞ்சு சாற்றை விட இருபது மடங்கு வைட்டமின்-சி அதிகம் உள்ளது. தினமும் காலையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதன் மூலம் உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளை சமாளிக்கலாம். மேலும் சருமத்திற்கும் கூந்தலுக்கும் நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: திராட்சை தண்ணீரைப் குடிப்பதால் ஒரே மாதத்தில் இந்த 5 அதிசய மாற்றங்களை உணர்வீர்கள்!!
நெல்லிக்காய் ஜூஸ் தகவல்களை ஆயுர்வேத மருத்துவர் தீக்ஷா பவ்சர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில் காலையில் முதலில் 20 மில்லி நெல்லிக்காய் சாறு எடுத்துக்கொள்வது எனது தினசரி வழக்கம் என்று கூறியுள்ளார். அவருடைய தைராய்டை சமநிலைப்படுத்த உதவுகிறது மற்றும் முடி உதிர்வதைத் தடுக்கிறது. இதன் எல்லா காரணங்களுக்காகவும் அவர் நெல்லிக்காய் ஜூஸை அதிகமாக விரும்புகிறார்.
நெல்லிக்காய் ஜூஸ் நன்மைகள்
- அமிலத்தன்மை, வீக்கம் அல்லது இரைப்பை பிரச்சனைக்கும் உதவுகிறது.
- செரிமானத்தை மேம்படுத்துகிறது.
- அதிக அளவு சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
- வைட்டமின் சி இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
- எடையைக் குறைக்கவும் பராமரிக்கவும் உதவுகிறது.
- கண்களுக்கும் நல்லது.
நெல்லிக்காயை எடுக்கும் முறை
- 3 நெல்லிக்காயில் சாறு எடுத்தால் போதும்.
- நெல்லிக்காய் கிடைக்கவில்லை என்றால், உள்ளூர் ஆயுர்வேதக் கடையில் நெல்லிக்காய் பொடி அல்லது சாறு பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் மறைக்க எளிதான வீட்டு வைத்தியம்!!
எச்சரிக்கை
எந்தவொரு மூலிகையையும் தொடர்ந்து சாப்பிடுவதற்கு முன் ஆயுர்வேத மருத்துவரை அணுகி உங்கள் நிலைமையை விரிவாக விவாதிப்பது நல்லது, இதனால் உங்கள் இயல்பு மற்றும் நோய்க்கு ஏற்ப அந்த மூலிகையை மருத்துவர் பரிந்துரைக்க முடியும்.
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation