herzindagi
How much fennel seeds to eat daily ()

Fennel Seeds To Womens Diet: பெண்கள் ஆரோக்கியத்திற்கு கவசமாக இருக்கும் பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் மசாலா பொருள்களில் ஒன்று. பெண்கள் கண்டிப்பாக தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Editorial
Updated:- 2024-08-12, 23:34 IST

இந்திய மசாலாப் பொருட்களில் தனித்துவம் பெற்றதில் பெருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கும். உணவின் சுவையையும், மனத்தையும் அதிகரிக்கும் அதே வேளையில் பெண்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன. பெண்கள் பெருஞ்சீரகத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம். இதைப் பற்றி விரிவாக ஆயுர்வேத நிபுணர் டாக்டர் திக்ஷா பவாசரிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க: நம்மை ஒருவழியாக்கும் மழைக்கால ஒற்றை தலைவலியை போக்கும் வழிகள்

பெண்களுக்கு பெருஞ்சீரகத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

fennel inside

  • பெண்களுக்கு பெரும்பாலும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில் பெருஞ்சீரகம் ஆன்டிஆன்ட்ரோஜன் பண்புகளைக் கொண்டுள்ளதால் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. பிசிஓஎஸ் உள்ள பெண்கள் பெருஞ்சீரகம் உட்கொள்வதால் பலன் பெறலாம்.  பெருஞ்சீரகம் விதைகள் உடலில் உள்ள ஆண்ட்ரோஜன்களைக் குறைக்க உதவுகிறது, இது முடி உதிர்வைக் குறைக்க உதவுகிறது.
  • இதில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளதால் ஹார்மோன் சமநிலையின்மைக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இதில் புரோஜெஸ்டோஜெனிக் பொருட்கள் உள்ளதால் தைராய்டு ஹார்மோன்களை சமப்படுத்த உதவுகிறது. பெருஞ்சீரகத்தில் ஸ்பாஸ்மோடிக் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் மாதவிடாய் வலி மற்றும் பிடிப்பைக் குறைக்க உதவுகிறது.
  • மாதவிடாய் காலத்தில் பெண்கள் அடிக்கடி வீக்கம் மற்றும் வாயு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர், இதனால் இவற்றை உட்கொள்வது இந்த பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
  • பெருஞ்சீரகத்தில் நல்ல அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி இருப்பதால் சருமத்தை மேம்படுத்த உதவுகிறது. இது கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருவை தடுக்க உதவுகிறது.

பெருஞ்சீரகத்தை உட்கொள்ளும் முறை

fennel seed new inside

  • பெருஞ்சீரகம் தண்ணீர் குடிக்கவும். இதற்கு ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி காலையில் குடிக்கவும்.
  • நீங்கள் பெருஞ்சீரகம் தேநீர் கூட குடிக்கலாம். பெருஞ்சீரகத்தை கொதிக்க வைத்து அந்த தேநீரை குடித்து வரலாம்.
  • பெருஞ்சீரகம் உலர்த்தி பொடி செய்து கொண்டு, அந்த பொடியை சாப்பிட்டவுடன் வெந்நீர் அருந்தலாம் அல்லது பாலில் கலந்து பருகலாம்.

 மேலும் படிக்க: தாய் மற்றும் குழந்தைக்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் சுகப்பிரசவம்

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க  Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]