பத்த கோணாசனம் பெண்களுக்கான சிறப்பான ஆசனம் என்று கூறப்படுகிறது. ஹிந்தி மொழியில் பத்த என்றால் பிணைக்கப்பட்ட என்றும் கோண என்றால் கோணம் என்றும் பொருள். இந்த யோகாசனம் butterfly போஸ் என்று அழைக்கப்படுகிறது. இதனை செய்வதனால் பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகிறது. பத்த கோணாசனம் செய்வது எப்படி என்றும் அதன் பலன்கள் குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த ஆசனம் படைப்புத் திறனும் மன உறுதியும் மேம்படுகின்றது. மேலும் இது மனதைப் பக்குவப்படுத்த உதவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு பத்த கோணாசனம் மிக சிறந்த ஆசனம் என்றும் கூறப்படுகிறது.
பத்த கோணாசனம் செய்முறை:
- யோகா மாட் ஒன்றை விரித்து அதில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். உங்கள் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும்.
- இப்போது ஆழ்ந்து மூச்சை இழுத்து விட வேண்டும்.
- பின்னர் இரு கால்களை மடக்கிக்கொள்ளுங்கள். இப்போது கால் பாதங்கள் இரண்டும் ஒன்றாக ஒட்டிய நிலையில், கைகளால் கால் பாதங்களை பிடித்து கொள்ளுங்கள்.
- இந்நிலையில் முதுகை வளைக்காமல் நிமிர்ந்து உட்கார வேண்டும். குறிப்பாக கால் முட்டிகள் தரையை தொடக்கூடாது.
- இதற்க்கு முதலில் தொடைகளை தரையில் தாழ்த்தினால் கால் முட்டிகள் சமநிலையில் சரியாக இருக்கும்.
- இதே சமயத்தில் இரண்டு கால்களை மேலும் கீழும் அசைக்க வேண்டும்.
- இந்த ஆசன நிலையில் 30 வினாடி முதல் ஒரு நிமிடம் வரை நிலைத்திருங்கள். அதன் பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து நேராக நிமிர்ந்து ஆரம்ப நிலைக்கு வர வேண்டும்.
மேலும் படிக்க: வயது முதிர்வை தடுக்க உதவும் ஹலாசனம்
பயன்கள் என்ன?
இந்த ஆசனத்தை செய்து வந்தால் பெண்களுக்கு மலட்டுத்தனம் நீங்கும். மேலும் பெண் பிறப்புறுப்புகளின் குறைபாடுகள் நீங்க உதவுகிறது. அதே போல சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை குறைபாடுகள் நீங்கி சிறுநீரகத்தின் செயல்பாடு சீராக அமையும். பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்புவலி, வயிற்று வலி மற்றும் அதிக இரத்தப்போக்கையும் இந்த ஆசனம் கட்டுப்படுத்துகிறது. முதுகெலும்பு பிரச்சினைகளால் அவதிப்படும் பெண்களுக்கு இந்த ஆசனம் பெரிதும் உதவும். பத்த கோணாசனத்தை தினமும் செய்து வந்தால் பின்புற முதுகு தசைகள் வலுப்பெறும். இந்த பட்டாம்பூச்சி போஸ் கழுத்து பகுதி, முதுகு, தலை பகுதிகளை தளர்வடைய உதவுகிறது. இந்த யோகாசன பயிற்சியின்போது மூளைக்கு எளிதில் ஆக்சிஜன் சென்றடைவதால் தலைவலி பிரச்சனைகள் குறையும்.
பயிற்சி முறை:
சில பெண்களுக்கு இந்த யோகாசன பயிற்சியில் கால்களை ஒன்றாக சேர்த்து வைக்கும்போது கால்கள் இரண்டும் தரையில் படாமல் மேலே தூக்கிக் கொண்டு நிற்கும். இந்த நிலையில் கால்களை மேலும் கீழுமாக ஏற்றி இறக்கி 10 முதல் 15 முறை தினமும் காலை, மாலை செய்து வந்தால் சில நாட்களில் கால்கள் தரையில் படிந்து விடும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க:கர்ப்பிணிகளுக்கு பெருமளவில் உதவும் பரத்வாஜாசனம்
குறிப்பு:
என்னதான் இடுப்புக்கும் முட்டிக்கும் வலு சேர்க்கும் ஆசனமாக இது இருந்தாலும் இடுப்புப் பிரச்சினை உள்ளவர்களும், கடுமையான முட்டி வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்ப்பது நல்லது. மேலும் யோகா நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே இந்த பத கோணாசனம் செய்ய வேண்டும்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation