சுவையான மாலை நேர சாட் ஐயிட்டங்கள் லிஸ்டில் இந்தியா முழுவதும் பலராலும் விரும்பப்படுகிறது பானி பூரி. நம்மூரில் பானி பூரி, ஆனால் இந்தியா முழுவதும் இதற்கு ஒரு டஜன் பெயர்கள் உள்ளன. ரக்தா, கோல் கப்பே, குப் சுப், பானி கே படாஷே, புல்கிஸ்,ஃபுச்கா இவை அனைத்தும் பானி பூரிக்கான மற்றொரு பெயர்கள். உலக அளவிலான நொறுக்குத்தீனி சந்தையில் பிரபலமாக உள்ள பிட்சா, பர்கர், மோமோஸ் வரிசையில் பானி பூரியும் ஒன்று என்றால் அது மிகையல்ல.
அந்த அளவுக்கு எல்லா மாநிலங்களிலும் பானி பூரி தனது சுவையால் நாக்கை ஆக்கிரமித்து வருகிறது. உண்மையில் பானி பூரி எப்படி தோன்றியது என்பதற்கு சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால் மகாபாரத்தில் திரெளபதியால் பானி பூரி அறிமுகம் செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் இந்தியாவில் பல ஆண்டுகளாக பரவி வருகிறது. கங்கை கரையில் உள்ள மகத நாட்டில் தோன்றி அங்கிருந்து பல மாநிலங்களுக்கு பரவி தற்போது தமிழகத்திலும் இளம் தலைமுறை விரும்பும் சாட் உணவாக மாறியுள்ளது பானி பூரி.
சென்னையில் பானி பூரி கடை போட்டால் பிழைத்து கொள்ளலாம் என்ற அளவுக்கு நிலை வந்துவிட்டது. ஆனால் அதே நேரம், பானி பூரி செய்முறை, தயாரிப்பு ஆகியவற்றில் ஆரோக்கியம் குறித்த கேள்விகளும் முன் வைக்கப்படுகின்றன. குறிப்பாக குழந்தைகள் இதை அதிகம் உண்ண வேண்டாம் எனவும் அறிவுருத்தப்படுகிறது. எனவே, வெளியில் வாங்கி சாப்பிட ரிஸ்க் எடுக்காதவர்கள் வீட்டிலேயே இதை ஆரோக்கியமாக செய்து சாப்பிடலாம். அதற்கான செய்முறையை இங்கு பகிர்கிறோம்.
இந்த பதிவும் உதவலாம்: வெண் பொங்கல் செய்வது எப்படி?
இந்த பதிவும் உதவலாம்:பெங்களூரு ஸ்பெஷல் தட்டு இட்லி ரெசிபி!
நீங்களும், வீட்டில் இந்த பானி பூரி ரெசிபியை கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]