
சப்பாத்திக்கு குருமாவை விடவும் பன்னீர் பட்டர் மசாலாவை பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக சைவ பிரியர்களுக்கு பன்னீர் சிக்கன் போன்றது. இதில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் அசைவத்தை காட்டிலும் பன்னீர் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. சப்பாத்திக்கு கிழங்கு, குருமா என சாப்பிட்டு போரடித்தவர்கள் நிச்சயம் பன்னீர் பட்டர் மசாலாவை முயற்சி செய்து பார்க்கலாம்.
வட இந்திய உணவான இது தற்போது தென்னிந்தியாவிலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக மாறியுள்ளது. புளிப்பு, காரம், ஸ்வீட் என பன்னீர் பட்டர் மசாலா நாவுக்கு அலாதியான ருசியை தருவதால் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். பானி பூரிக்கு பிறகு தென்னிந்தியாவில் பன்னீர் பட்டர் மசாலா தனி இடத்தை பிடித்து விட்டது.
அதே நேரம் இதை வீட்டில் செய்வதை காட்டிலும் பலரும் ஹோட்டலில் வாங்குவதையே வழக்கமாக வைத்துள்ளனர். கடையில் வாங்கி சாப்பிடுவதை விடவும் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
எனவே எளிமையான முறையில் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்:மிளகு ரசம் இப்படி செய்யுங்கள்
இந்த பதிவும் உதவலாம்:கேஎஃப்சி சிக்கன் இனி வீட்டிலேயே செய்யலாம்
இதை சப்பாத்தி, நெய் சோறு, புலாவ் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாறினால் வீட்டில் இருப்பவர்கள் ஒருபிடி பிடிப்பார்கள். நீங்களும் கண்டிப்பாக வீட்டிலேயே பன்னீர் பட்டர் மசாலாவை செய்து குடும்பத்துடன் உண்டு மகிழுங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]
