herzindagi
image

நாவில் எச்சில் ஊற வைக்கும் பன்னீர் பாயாசம் செய்யலாம் வாங்க!‘

பண்டிகைக் காலங்கள் மற்றும் வீட்டில் நடைபெறக்கூடிய விசேச நாட்களில் வழக்கமாக செய்யும் இனிப்பு பலகாரத்திற்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் பன்னீர் பாயாசத்தை ஒரு முறையாவது செய்து பாருங்கள்.
Editorial
Updated:- 2025-11-12, 15:35 IST

இனிப்புகள் என்றாலே ஒரு சிலருக்கு அளாதிப்பிரியம். லட்டு, கேசரி, பாயாசம், பொங்கல், பாதுஷா போன்ற விதவிதமான இனிப்புகள் என்றால் வழக்கமான அளவை விட கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவார்கள். அதிலும் வீட்டில் ஏதேனும் விசேசங்கள் வந்தாலும் கேசரி, பாயாசம் என ஏதாவது இனிப்புகளும் பிரதானமாக இடம் பெறும். இதை கொஞ்சம் வித்தியாசமாகவும், அதீத சுவையோடு செய்ய வேண்டும் என்றால் ஒருமுறையாவது பன்னீரை வைத்து பன்னீர் பாயாசம் செய்துப் பாருங்கள். இந்த பாயாசம் நாவிற்கு சுவையோடு ஊட்டச்சத்துக்களையும் தரக்கூடும். இதுவரை இந்த பாயாசத்தை நீங்கள் செய்தது இல்லையென்றால் கீழ்வரக்கூடிய சமையல் குறிப்புகளைப் பயன்படுத்தி வீட்டிலேயே சுலபமாக செய்துப் பாருங்கள். இதோ அதற்கான செய்முறை விளக்கம் இங்கே..

மேலும் படிக்க: தக்காளியில் பாயாசம் செய்யலாம் தெரியுமா? எளிய செய்முறை விளக்கம் இங்கே!


நாவில் எச்சில் ஊறும் பன்னீர் பாயாசம்:

தேவையான பொருட்கள்:

  • பால் - ஒரு லிட்டர்
  • பன்னீர் - 200 கிராம்
  • சர்க்கரை - 2 கப்
  • ஏலக்காய் - 2 டீஸ்பூன்
  • குங்குமப்பூ - சிறிதளவு
  • நெய் - சிறிதளவு
  • பாதாம் - 10
  • பிஸ்தா - 10
  • உலர் திராட்சை - 10

மேலும் படிக்க: ஆரோக்கியம் நிறைந்த புதினா சாமை வடை செய்முறை!


பன்னீர் பாயாசம் செய்முறை:

  • ஆரோக்கியம் மற்றும் அதீத சுவையைக் கொடுக்கும் பன்னீர் பாயாசம் செய்வதற்கு முதலில் அடி கனமான பாத்திரத்தில் பாலை நன்கு காய்ச்ச வேண்டும்.
  • பால் நன்கு காய்ந்ததும் சர்க்கரையைச் சேர்த்து சுமார் 10 நிமிடங்களுக்கு நன்கு சுண்ட காய்ச்சவும்.
  • இதையடுத்து பன்னீரை லேசாக துருவி பாலுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். 5 நிமிடங்களுக்கு பால் நன்கு காய்ந்ததும் இதனுடன் ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து சுமார் பத்து நிமிடங்களுக்கு நன்கு காய்ச்சி இறக்கி வைக்கவும்.

  • இறுதியாக கடாயில் நெய் சேர்த்து சூடேற்றவும். கொஞ்சம் சூடானமும் முந்திரி. திராட்சையை சேர்த்து காயச்சி வைத்துள்ள பாலுடன் சேர்க்கவும். இதோடு பாதாம் மற்றும் பிஸ்தாவை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சேர்த்தால் போதும். சுவையான பன்னீர் பாயாசம் ரெடி.
  • இப்படி சட்டென்று செய்யக்கூடிய பாயாசத்தை ஒருமுறையாவது வீட்டிலேயே செய்துப் பாருங்கள். நிச்சயம் வழக்கமான இனிப்பு வகைகளுக்கு நல்ல மாற்றாக அமையும்.

மேலும் படிக்க: கர்ப்பிணிகள் கட்டாயம் இந்த உணவை சாப்பிட வேண்டும்; அத்துணை நன்மைகள் கொட்டிக்கிடக்குது!

பன்னீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

பன்னீரில் புரதம், கால்சியம், வைட்டமின் டி, பாஸ்பரஸ், வைட்டமின் பி 12, ஜிங்க் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளதால், எலும்புகளை வலுவாக்கும். மேலும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவில் உள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலுக்குத் தேவையான ஆற்றலையும் அளிக்கிறது.

Image Source - Freepi

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]