herzindagi
traditional mor kuzhambu recipe

Iyengar Mor kuzhambu Recipe : இப்படி மோர் குழம்பு வெச்சு பாருங்க, 4 நாளைக்கு உங்க குழம்பு பத்தி மட்டும் தான் பேசுவாங்க!

மோர் குழம்பு செய்வது ரொம்ப ஈசி. ஆனா இதோட சுவை நிச்சயமா வேற லெவல்ல இருக்கும். நீங்களும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க…
Editorial
Updated:- 2023-06-06, 09:47 IST

தேங்காய், சீரகம், பச்சைமிளகாய் வாசனை தான் இந்த குழம்போட ஹைலைட். அதுவும் தாளிக்க தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணா, கேட்கவே வேண்டாம். குழம்பு அப்படியே கல்யாண வீட்டுல சாப்பிடுற மாதிரியே இருக்கும். இதுல வெண்டைக்காய், பூசணிக்காய்னு உங்களுக்கு விருப்பமான காய்கறி சேர்த்துக்கலாம். வீட்ல காயே இல்லாட்டியும் பிரச்சனை இல்லைங்க, பிளைன் மோர் குழம்பு கூட வைக்கலாம். வீட்ல காய் இல்லாதப்போ கூட இந்த மாதிரி ஈஸியா 10 நிமிஷத்துல குழம்பு வெச்சுறலாம்.

இது கூட உருளை கிழங்கு ரோஸ்ட், சேனை கிழங்கு வறுவல்னு வெச்சு சாப்பிட்டீங்கனா கண்டிப்பா இந்த பதிவுக்கு வந்து எனக்கு நன்றி சொல்லுவீங்க! இந்த பெர்ஃபெக்ட் மோர் குழம்பு ரெசிபி செய்ய கத்துக்கலாம் வாங்க.

இந்த பதிவும் உதவலாம்: வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஒரு ஹெல்த்தியான அச்சு முறுக்கு ரெசிபி!

தேவையான பொருட்கள்

மசாலா அரைக்க

  • துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் - ½ டீஸ்பூன்
  • பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன்
  • தனியா - 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - ½ கப் (ஊற வைக்க)
  • துருவிய தேங்காய் - ¼ கப்
  • பச்சை மிளகாய் 3-5
  • இஞ்சி - சிறிய துண்டு

iyengar mor kuzhambu recipe

மற்றவை

  • வெள்ளை பூசணி - 1 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய்
  • மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
  • மோர் - 1.5 கப்
  • கடுகு - ½ டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 1
  • பெருங்காயம் - ¼ டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

mor kuzhambu recipe southindian

  • முதலில் துவரம் பருப்பு மற்றும் அரிசியை குறைந்தது அரை மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.
  • பின்னர் தயிரை அடித்து மோர் தயாரித்து கொள்ளவும்.
  • இப்போது ஒரு மிக்ஸர் ஜாரில் இஞ்சி, ஊற வைத்த அரிசி மற்றும் துவரம் பருப்பு, பச்சை மிளகாய், தேங்காய், தனியா மற்றும் சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் தண்ணீர், மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதில் நறுக்கி வைத்துள்ள வெள்ளை பூசணி சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
  • பூசணிக்காய் நன்கு வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்க்கவும்.
  • இதை குறைந்த தீயில் வைத்து கொதிக்க விடவும்.
  • இறுதியாக அடித்து வைத்துள்ள மோர் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  • அடுத்ததாக ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயம் காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து மோர் குழம்பில் கொட்டவும்.
  • மோர் குழம்பு தயார்! இதை சூடாக வடித்த சாதத்துடன் பரிமாறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: வெறும் 2 பொருட்கள் போதும், சூப்பர் ஹெல்த்தியான ஆளி விதை பர்பியை இன்றே செய்து பாருங்கள்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]