பொங்கல் விடுமுறை எப்படி முடிந்தது என்பதே தெரியாதது போல அதற்குள் வார விடுமுறை வந்துவிட்டது. பொங்கல் பண்டிகைக்கு சுவைமிக்க இனிப்பு உணவுகள் மற்றும் பலகாரங்களையே அதிகம் சாப்பிட்டு இருப்போம். காரசாரமான மசாலா கொண்ட பொருட்களை சாப்பிட்டு இருக்க வாய்ப்பு குறைவே. அதனால் வார விடுமுறையில் காரசாரமான உணவை சுவைத்து மகிழ கத்தல் பிரியாணி எனும் பலாக்காய் பிரியாணி செய்வது எப்படி என பார்க்கப் போகிறோம். இது சைவ பிரியாணி என்றாலும் கூட மட்டன் பிரியாணியின் சுவைக்கு இணையாக இருக்கும். இதை செய்வதற்கு பேபி பலாக்காய் போதுமானது.
பலாக்காய் பிரியாணி செய்வதற்கு நீண்ட நேரம் எடுக்குமா என நீங்கள் சந்தேகிக்கலாம் ஆனால் இது ஒரு மணி நேரத்தில் தயாரிக்ககூடியது.
பிரியாணி செய்வதற்கு தரமான அரிசி, புதிய கொத்தமல்லி மற்றும் புதினா கட்டு பயன்படுத்தவும். அப்போது தான் பிரியாணியின் சுவை நன்றாக இருக்கும்.
சமைக்கும் முன்பாக பேபி பலாக்காயின் தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி விடவும். பலாக்காயை ஒரு குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 60 விழுக்காடு அளவிற்கு வேகவைக்கவும். ஏனென்றால் மீதி பலாக்காய் பிரியாணி மசாலா சமைக்கும் போது வெந்து விடும். அதனால் பலாக்காயை நாம் முழுவதுமாக வேக வைக்க போவதில்லை.
அதேநேரம் 350 கிராம் பாஸ்மதி அரிசியை பத்து நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைத்திடுங்கள். இந்த பிரியாணி செய்வதற்கு ஒரு தட்டையான கடாய், இரண்டு பெரிய பாத்திரங்கள் பயன்படுத்த வேண்டும். இதற்கான காரணம் நாம் பலாக்காய் தம் பிரியாணி தயாரிக்க போகிறோம்
பெரிய பாத்திரத்தைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் மசாலா தயாரிக்கும் போது நாம் சேர்க்கும் பொருட்கள் வெளியே தெறிக்க கூடாது.
மேலும் படிங்க Chilli Bread Recipe : சுவையான மொறுமொறுப்பான சில்லி பிரட் செய்முறை
மேலும் படிங்க குஜராத்தி ஸ்டைல் வெந்தயக் கீரை சப்பாத்தி செய்முறை
தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட்டால் இந்த வார விடுமுறை கொண்டாட்டமாக அமைந்திடும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]