பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் காலங்களில் மிகப்பெரிய வலிகளை சந்தித்து மிகவும் சோர்வாக காணப்படுவார்கள். மாதவிடாய் காலங்களை சமாளிப்பது மிகவும் கடினமானதாகவும் இருக்கும். மாதவிடாய் ஒரு இயற்கையான செயல்முறையாக இருந்தாலும், அந்த மாதத்தின் போது வரும் வலிகள், அறிகுறிகளை சமாளிப்பது பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் பெரும் சவாலாக உள்ளது. மாதவிடாய் விளைவாக இரண்டு முதல் ஏழு நாட்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படுகிறது. இது உடல் வீக்கம், குமட்டல், தலைவலி, உடல் சோர்வு மனநிலை மாற்றங்கள் ஆகியவற்றை உண்டாக்கும். மாதவிடாய் காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இனி கவலைப்பட வேண்டாம். குறிப்பாக மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வரும் வலியை சமாளித்து குறைக்க உதவும் ஐந்து பானங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
இஞ்சி ஒரு தவிர்க்க முடியாத உணவாகும். இஞ்சி உங்களுக்கு மாதவிடாய் வலியை குறைக்க பெரிதும் உதவுகிறது. இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இது உங்கள் கருப்பையில் உள்ள தசைகளை தளர்த்தவும், வலிகளைப் போக்கவும் உதவும். மேலும் குமட்டல் மற்றும் உடல் வீக்கம் போன்ற பிற மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இஞ்சி உங்களுக்கு உதவுகிறது. மாதவிடாய் காலங்களில் ஒரு கப் இஞ்சி டீ தயாரித்து குடித்து வந்தால் மாதவிடாய் வலி பிரச்சனை சரியாகி மாதவிடாய் சீராக ஓடவும் உதவும்.
மேலும் படிக்க : விரைவான எடை இழப்பின் அபாயங்கள் உங்களுக்குத் தெரியுமா?
கெமோமில் தேநீரின் இனிமையான மற்றும் அமைதியான பண்புகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இரவில் தூங்குவதில் சிக்கல் உள்ளவர்களால் இந்த தேநீர் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கெமோமில் தேநீர் உங்கள் மாதவிடாய் வலிக்கு ஒரு சிறந்த தீர்வாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கெமோமில் தேநீர் இயற்கையான தசை தளர்த்திகளாக செயல்படும் கலவைகளால் நிரம்பியுள்ளது. அசௌகரியத்தை குறைக்கவும், மாதவிடாய் வலிகளை எளிதாக்கவும் உதவுகிறது. மேலும், மேலே குறிப்பிட்டுள்ளபடி, கெமோமில் தேநீர் மிதமான மயக்க விளைவுகளைக் கொண்டுள்ளது. இது உங்கள் மனதைத் தளர்த்துகிறது மற்றும் உங்கள் மாதவிடாய் காலத்தில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.
மாதவிடாய் காலங்களில் வரும் அதீத வலியை குறைக்க நீங்கள் வழியை தேடுகிறீர்கள் என்றால் சாக்லேட் கலவை உங்களுக்கு சிறந்த வலி நிவாரணியாக உதவும். டார்க் சாக்லேட்டில் இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் அதிகம் நிரம்பியுள்ளன. அவை உங்கள் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் உங்கள் கருப்பை தசைகளை தளர்த்தவும் உதவும். சாக்லேட்டில் பாலிஃபீனால்கள் உள்ளன. இது உங்கள் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கும். மேலும் இது ஒரு ரசாயன கலவை போல் செயல்படும். உருகிய டார்க் சாக்லேட்,வெண்ணிலா சாரு, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் பால் ஆகியவற்றை கொண்டு ஆரோக்கியமான சூடான சாக்லேட் கலவையை தயார் செய்து நீங்கள் அருந்தலாம்.
மிளகு கீரை டீ புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமல்ல. ஒரு கப் பெப்பர்மென்ட் டீ சாப்பிடுவது உங்கள் தசைகளை தளர்த்த உதவும். மிளகுக்கீரை டீயில் மெந்தோல்,ஆண்டிஸ்பாஸ்மோடிக், அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் உள்ளன. இவை இயற்கையான வலி நிவாரணியாக செயல்படுகின்றன மற்றும் உடலில் வரும் பதற்றத்தை குறைக்க உதவும். மிளகுக்கீரை தேநீர் வழங்கும் குளிர்ச்சியான உணர்வு அமைதியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் விளைவை அதிகரிக்கும். மிளகுக்கீரை இலைகளை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை பருகினால் மாதவிடாய் காலத்தில் உடல் சீராக உதவும்.
மேலும் படிக்க : கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்தம்; தவிர்ப்பது எப்படி?
சிறுவயதில், உங்களுக்கு உடல்நிலை சரியில்லாத போதெல்லாம் மஞ்சள் பால் குடித்தது நினைவிருக்கிறதா? அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக பாரம்பரிய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் பால் உங்கள் மாதவிடாய் வலியை ஓரளவு குறைக்க உதவுகிறது. இந்த மசாலாவில் குர்குமின் உள்ளது, இது உங்கள் உடலில் அழற்சி இரசாயனங்கள் உற்பத்தியைக் குறைக்கும் ஒரு செயலில் உள்ள கலவை ஆகும். ஒரு கப் வெதுவெதுப்பான மஞ்சள் பால் குடிப்பது உங்கள் இறுக்கமான தசைகளை ஆற்றவும், பிடிப்புகளை எளிதாக்கவும் உதவும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]