குளிர்காலம் தொடங்கிய நிலையில், பகல், இரவு பாராமல் பனி நாள் முழுவதும் கொட்டிக் கொண்டிருக்கிறது. அதிகப் பனிப்பொழிவால் பலரும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளால் அதிகம் சிரமப்படுவார்கள். குறிப்பாக இருமலால் நிறைய பேர் அவஸ்தைப்படுவார்கள். ஒருவரது உடலில் சளித் தேக்கம் அதிகமாக இருந்தால், அந்த சளியானது வெளியேறும் கட்டத்தில் மூக்கு பகுதியில் துர்நாற்றத்தை உண்டாக்கும்.
மேலும் படிக்க:"மலம் கழிக்கனும்னு தோணும் ஆனா வராது" காரணம் என்ன ? 10 நிமிடத்தில் சரி செய்ய சூப்பர் டிப்ஸ்
சளி நுரையீரலில் தேங்கியிருந்தால், அது சுவாசப் பாதையில் இடையூறை ஏற்படுத்தி, சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க வைப்பதோடு, தொடர் இருமலையும் உண்டாக்கும். நீங்கள் இப்படி தொடர் இருமலுடன், இருக்கும் போது மூக்கு, மற்றும் சுவாசப் பாதையில் சளியின் துர்நாற்றம் வரத்தொடங்கும், அந்த துர்நாற்றம் நிறைந்த சளியை ஒரு சில இயற்கை வழிகளின் மூலம் வெளியேற்றலாம். உங்களுக்கு நெஞ்சு மற்றும் தொண்டையில் சிக்கியுள்ள சளியை எளிய வழியில் வெளியேற்றுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சளியை வெளியேற்ற இயற்கை வீட்டு வைத்தியம்
எலுமிச்சை மற்றும் தேன்
- எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சுவாசக் குழாயில் உள்ள அடைப்பை சரிசெய்வதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்.
- தேனில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த இரண்டு பொருட்களின் கலவையும் சளி பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும்.
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை சாறு- 2 டீஸ்பூன்
- தேன் - 1 டீஸ்பூன்
செய்முறை
- ஒரு பௌலில் எலுமிச்சை சாற்றினை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
- பின் அதில் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- அதில் சிறிதளவு சுடு தண்ணீர் சேர்க்கவும்.
- பின்பு இந்த கலவையை தினமும் மூன்று முறை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலில் தேங்கியுள்ள சளி இளகி வெளியேற ஆரம்பிக்கும்.
ஆப்பிள் டைசர் வினிகர்
- ஆப்பிள் டைசர் வினிகரில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளது.
- இது உடலில் pH அளவை சீராக்கும் மற்றும் சுவாசக் குழாயில் தேங்கியுள்ள சளியை இளகச் செய்வதோடு, சளி உருவாவதைத் தடுக்கும்.
- இதற்கு செய்ய வேண்டியதெல்லாம், 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து, தினமும் குடிக்க வேண்டும்.
- இதனால் தொண்டையில் உள்ள பிரச்சனை அனைத்தும் குணமாகும்.
இஞ்சி சாறு
- இஞ்சி, கழுத்து மற்றும் மார்பு பகுதியில் உள்ள சளியை நீக்கக்கூடியது.
- ஏனெனில் இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் சளி நீக்க பண்புகள் உள்ளன.
- அத்தகைய இஞ்சியை ஒருவர் தினமும் 3-4 துண்டுகள் உட்கொண்டு வாந்தாலோ அல்லது இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்து தினமும் 2 முறை குடித்து வந்தாலோ, இறுக்கமடைந்த சளி இளகி வெளியேறும்.
தேவையான பொருட்கள்
- தேன் - 1 டீஸ்பூன்
- தண்ணீர் - 2 கப்
- இஞ்சி - 6-7 துண்டுகள்
- மிளகு தூள்- 1 டீஸ்பூன்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் இஞ்சி மற்றும் மிளகு சேர்க்க வேண்டும்.
- பின் பாத்திரத்தை காற்று புகாமல் மூடி வைத்துவிட்டு , மிதமான தியில் வைத்து 5-7 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
- பின்பு அடுப்பை அணைத்து, கலவையை வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
மேலும் படிக்க:கொலஸ்ட்ராலை 21 நாட்களில் விரட்ட- மல்லி, வெந்தய விதைகளை இப்படி பயன்படுத்துங்கள்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil
image source: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation