herzindagi
ginger and turmaric water  ()

Kidney stones Cure: சிறுநீரகக் கற்களால் அவதிப்படுபவர்களுக்கு இஞ்சி மற்றும் மஞ்சள் தேநீரை அருந்துங்கள்

சிறுநீரகக் கற்கள் பிரச்சனை குணப்படுத்த இந்த  இஞ்சி மற்றும் மஞ்சள் தேநீர் அருந்தவும். கல் பிரச்சனை குணமாகும்.
Editorial
Updated:- 2023-09-09, 06:55 IST

கிட்னி ஸ்டோன் பிரச்சனை உடலுக்கு அதிக வலியைக் கொடுக்கும் மற்றும் அதன் அறிகுறிகளை விரைவாகக் கண்டறிய முடியாது. சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது சிறுநீரக கல் எனப்படும். கற்கள் பிரச்சனைக்கு ஒவ்வொருவரும் பலவிதமான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். ஆனால் இந்த அறிவுரைகள் அனைத்தும் பயனற்றவை. பெரும்பாலான மக்கள் கற்கள் விஷயத்தில் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கிறோம். ஆனால் இது எந்த பலனையும் தருவதில்லை. எனவே அனைத்து அறிவுரைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு இஞ்சி மற்றும் மஞ்சள் தேநீர் அருந்தவும். இதனால் கற்கள் பிரச்சனை தீரும்.

 

இந்த பதிவும் உதவலாம்: ஊறவைத்த தனியா தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

 சிறுநீரகம் நமது உடலில் மிக முக்கியமான அங்கம். அதில் ஒரு சிறிய எதிர்மறையான விளைவு கூட ஏற்பட்டால் நமது வழக்கமான வாழ்க்கை  முறையில் இது ஒரு தொந்தரவாக இருக்கும். அதனால்தான் சிறுநீரகங்களைப் பற்றி சிறப்பு கவனம் செலுத்த மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் எல்லோரும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதில்லை இதன் காரணமாக சிறுநீரக கல் பிரச்சனை ஏற்படுகிறது.

இஞ்சி மற்றும் மஞ்சள் தேநீர்

ginger and turmaric water tea site

இஞ்சி மற்றும் மஞ்சள் தேநீர் சிறுநீரக கற்களுக்கு நன்மை பயக்கும். சிறுநீரக கற்களைத் தவிர்க்க பல சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. பெரிய அளவிலான கற்களை அகற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நிறைய சிக்கல்கள் உள்ளன. அதனால்தான் சிறுநீரகக் கல்லை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே உங்கள் சிறுநீரக கல் பிரச்சனை ஆரம்ப நிலையில் இருந்தால் நீங்கள் அறுவை சிகிச்சை செய்ய விரும்பவில்லை என்றால் இன்றிலிருந்து தினமும் இஞ்சி மற்றும் மஞ்சள் தேநீர் குடிக்கத் தொடங்குங்கள்.

 இஞ்சி மற்றும் மஞ்சள் கற்களை குணப்படுத்த பழமையான மற்றும் பயனுள்ள வழி. மருத்துவர்களும் இதை குடிக்க அறிவுறுத்துகிறார்கள். நியூட்ரிஹெல்த் நிறுவனர் டாக்டர் ஷிகா ஷர்மா கூறுகையில், "இஞ்சி, மஞ்சள் இரண்டிலும் அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளதால் உடல் முழுவதும் நச்சுத்தன்மை நீக்கப்படுகிறது. இஞ்சியை உட்கொள்வதால் செரிமான அமைப்பு மேம்படும். இதனால் கற்கள் பிரச்சனை அதிகரிக்காது. மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் டையூரிடிக் தன்மை காரணமாக அடிக்கடி சிறுநீர் வெளியேற செய்யும். மஞ்சள் இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது, இது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது."

தேநீர் தயாரிக்க தேவையான பொருட்கள்

  • இஞ்சி துண்டு
  • சிறிது மஞ்சள்
  • தண்ணீர்
  • ஒரு ஸ்பூன் ஆர்கானிக் தேன்

இஞ்சி மற்றும் மஞ்சள் தேநீர் செய்முறை

ginger and turmaric water tea

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி நன்கு கொதித்ததும், அதில் இஞ்சி மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  • இந்த கலவையை 10-15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும் இதனால் இஞ்சி மற்றும் மஞ்சள் சாறுகள் அனைத்தும் தண்ணீரில் கலக்கப்படும்.
  • இஞ்சியும் மஞ்சளும் தண்ணீரில் நன்றாகக் கலந்த பின்அதை ஒரு கோப்பையில் வடிகட்டி, அதில் ஒரு ஸ்பூன் தேனைச் சேர்க்கவும், அதனால் கசப்பு சுவை இல்லாமல் இருக்கும்.
  • இந்த தேநீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

இந்த பதிவும் உதவலாம்: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேநீர் அருந்துவதற்கான சரியான நேரமும் வழியும் இதோ..

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

 

Image Credit- Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]