ஊறவைத்த உலர் திராட்சை நீரில் கரையாத நார்ச்சத்து மற்றும் செரிமானத்திற்கு உதவும் இயற்கை திரவங்கள் உள்ளன. ஊறவைத்த உலர் திராட்சை தண்ணீரை குடிப்பது மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் உங்கள் வயிற்றை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
ஊறவைத்த உலர் திராட்சைகளில் இரும்புச்சத்து உள்ளது. இரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கு இரும்பு சத்து அவசியம் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் உலர் திராட்சை இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையை தடுக்க உதவுகிறது. உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடுவது உடலில் இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதை மேம்படுத்தும்.
ஊறவைத்த திராட்சையில் உள்ள பொட்டாசியம் உள்ளடக்கம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுவதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும். பொட்டாசியம் இதய செயல்பாட்டை ஆதரிப்பதற்கு ஒரு முக்கிய கனிமம். உலர் திராட்சைகள் கால்சியத்தின் நல்ல மூலமாகும். இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கிறது.
திராட்சையில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
ஊறவைத்த திராட்சை அதன் நார்ச்சத்து உள்ளடக்கம் காரணமாக திருப்திகரமான சிற்றுண்டியாக இருக்கும். நார்ச்சத்து நமது உடலுக்கு முழுமையான உணர்வை தருகிறது. இது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் எடை நிர்வாகத்தில் உதவுகிறது. எடை இழப்புக்கு நாம் சர்க்கரையை தவிர்க்க வேண்டும். ஆனால் பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் கொண்ட ஊறவைத்த உலர் திராட்சை சாப்பிடுவது உடலில் ஆற்றல் அளவுகளை அதிகரிக்கிறது.
உலர் திராட்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்ட பாலிபினோலிக் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் போன்ற கலவைகள் உள்ளன. இவை ஒளிகுவியச் சிதைவுக்கு எதிராக பாதுகாப்பு தந்து கண் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கக்கூடும்.
திராட்சையில் உள்ள இயற்கை சர்க்கரை உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டும். இது வாயை சுத்தப்படுத்தவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உதவுகிறது.
திராட்சையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தொடர்ந்து உட்கொள்ளும் போது ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கும்.
மேலும் படிங்க சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா ? சர்க்கரை அளவு அதிகரிக்குமா ?
தினமும் வெறும் வயிற்றில் ஊறவைத்த உலர்திராட்சையின் தண்ணீரை குடிப்பதால் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இரத்த சுத்திகரிப்பு போன்ற உடல் செயல்பாடுகளை ஊக்குவித்து உடலில் இருக்கும் நச்சுகளை நீக்குகிறது. ஊற வைத்த திராட்சை தண்ணீர் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையை பராமரிக்கும் மயிர்க்கால்களை தூண்டி தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. ஊறவைத்த உலர்ந்த திராட்சை தண்ணீரை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குடிப்பதால் இதய நோய் அபாயம் குறைகிறது மற்றும் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]