சிகரெட் பாக்கெட்டுகளில் வாய் புற்றுநோயின் படத்தைப் பார்த்திருப்பீர்கள். எந்த வடிவத்திலும் புகையிலையை உட்கொள்வது ஆபத்தானது இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது. சிகரெட் பிடிப்பவர் உடல்நிலை கேடு விலைவிக்கும் என்பது தெரியும். இவர்கள் மட்டுமின்றி அருகில் இருப்பவர்கள் சேர்ந்து கஷ்ட்டப்படுகின்றனர். புகைப்பிடிப்பவர் இதை அறிந்தும் மற்றவர்களுக்கு தீங்கு கொடுக்கிறார்கள்.
மேலும் படிக்க: 30 வயது மேல் இதய நோய் வராமல் தடுக்க இந்த உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள்
அதுமட்டுமின்றி புகைபிடிப்பது பற்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. சிகரெட் பிடிப்பது பற்களில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை பல நேரங்களில் மக்கள் உணரவில்லை. Dentem Dental and Orthodontic Clinic இன் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குணிதா சிங் கருத்துப்படி புகைபிடித்தல் முதலில் பற்களை பாதிக்கத் தொடங்குகிறது. இது வாய் புற்றுநோய்க்கு மட்டுமல்ல, ஈறு பிரச்சனைகள், பல் இழப்பு, பல் சிதைவு மற்றும் வாய்வழி அறுவை சிகிச்சைக்கு கூட வழிவகுக்கும்.
ஈறு பிரச்சனைகள் பெரிதாக இருக்கும்
புகைப்பிடிப்பவர்களுக்கு 4-5 மடங்கு அதிகமான ஈறு பிரச்சனைகள் வரலாம். ஒருவர் தொடர்ந்து புகைப்பிடிப்பவராக இருந்தால் ஈறு பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிய முடியாது. எப்படியே கண்டுபிடித்தாலும் தொடர்ந்து புகைப்பிடிப்பவராக இருந்தால் அவர்களுக்கு சிகிச்சையை எளிதில் செய்ய முடியாது. ஈறுகளில் நெக்ரோசிஸ் பிரச்சனையும் இருக்கலாம். ஏதேனும் அறுவை சிகிச்சை தவறுதலாக செய்தால் புகைப்பிடிப்பவரின் வாயில் விரைவில் குணமாகாது.
புகையிலை நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது
புகையிலையை உட்கொண்டால் நோயெதிர்ப்பு அமைப்பு மெதுவாக வேலை செய்யத் தொடங்குகிறது. புகைப்பிடிப்பவரின் பல் அகற்றப்பட்டால் அவரது வாயில் உள்ள காயம் குணமடைய நீண்ட நேரம் எடுக்கும். மெதுவான நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக இவை அனைத்தும் நிகழ்கின்றன.
வாய் புண் மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம்
சிகரெட் பிடிப்பது வாய் புற்றுநோய் மற்றும் அல்சர் ஆகிய இரண்டிற்கும் வழிவகுக்கும். சிகரெட்டுடன் மது அருந்துபவர்கள் இன்னும் அதிக ஆபத்து ஏற்படும். இதனால் நாக்கு, கன்னங்கள், அண்ணம், உதடுகள் போன்றவற்றில் புண்கள் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
வாய் புண் அறிகுறிகள்
- 10 நாட்களுக்கு மேல் நீடிக்கும் வாய் புண்கள்
- வாயில் சிவப்பு அல்லது வெள்ளை திட்டுகள்
- வாயில் வீக்கம்
- பற்கள், ஈறுகள் மற்றும் கன்னங்களில் இரத்தப்போக்கு அல்லது அடிக்கடி வெடிப்பு
- புகைபிடிப்பதால் இந்த நோய்கள் வாயில் தோன்ற ஆரம்பிக்கும்
- வாய் துர்நாற்றம்: புகைபிடிப்பதால் இது மிகவும் அதிகமாகிறது. இதனால் ஹலிடோசிஸ் என்ற நோய் ஏற்படுகிறது.
சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தால் வாயின் சுவை மாறுகிறது. சுகாதாரமின்மை மற்றும் இனிப்புகள் சாப்பிடுவதால் மட்டும் துவாரங்கள் ஏற்படாது. புகைபிடிப்பதும் பல் சொத்தைக்கு ஒரு காரணம்.புகைபிடித்தல் முதலில் பற்கள் மஞ்சள் நிறத்தில் பாதிக்கிறது.
மேலும் படிக்க: 15 நாட்களில் உடல் கொழுப்பை குறைத்து ஸ்லிம்மாக மாற்றும் 3 உடற்பயிற்சிகள்
பற்களை பராமரிக்க செய்ய வேண்டியவை
- பற்களை இரண்டு முறை துலக்க வேண்டும். நாள் முழுவதும் உங்கள் பற்களில் குவிந்திருக்கும் கிருமிகள் மற்றும் பிளேக்கை அகற்ற இரவில் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.
- சிகரெட் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், வாய்வழி சுகாதார பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். மெதுவாக பல் துலக்க வேண்டும் பின்னர் நாக்கு சுத்தம் செய்ய வேண்டும். சிறிது பருத்தியில் கிளிசரின் தடவி நாக்கை சுத்தம் செய்யலாம்.
- நாக்கை சுத்தம் செய்வது போலவே மவுத்வாஷைப் பயன்படுத்துவதும் முக்கியம். மவுத்வாஷ், தூரிகையால் அடைய முடியாத வாயைச் சுற்றியுள்ள கடினமான பகுதிகளை எளிதில் அடையலாம்.
- தண்ணீர் குடிக்க வேண்டும் இது பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரும். எனவே தண்ணீர் குடிப்பதை நிறுத்தாமல் இருப்பது நல்லது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit- Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation