குளிர் காலத்தில் நம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும், இதனால் பல விதமான வியாதிகள் நம்மை எளிதில் சூழும். அதனால் தினசரி ஒரு நெல்லிக்காய் உட்கொள்வது சிறந்த தீர்வு. நெல்லிக்காயில் ஆரஞ்சு பழத்தை விட 8 மடங்கு அதிகமான வைட்டமின் C சத்து உள்ளது. மாதுளையை விட 17 மடங்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது.
நெல்லிக்காய் நம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் நம் சருமம் மற்றும் முடிக்கு மிகவும் நன்மை அளிக்க கூடியது. இதனை குளிர் காலத்தில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நம்முடைய உடல் ஆரோக்கியம் வருடம் முழுவதும் சிறப்பாக இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு இந்த நெல்லிக்கனியின் சுவை பிடிக்காமல் போகிறது, அதனால் இயற்கை நமக்களித்த இந்த வரப்பிரசாதத்தை உண்ணாமல் தவிர்க்கின்றனர்.
இதுவும் உதவலாம்:உடல் எடையைக் குறைக்க பப்பாளி எப்படி உதவுகிறது தெரியுமா?
இது போன்றவர்களுக்கு நெல்லிக்காயை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு புதிய வழியை நாங்கள் சொல்கிறோம். ஆயுர்வேத நிபுணர், டாக்டர். தீக்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை பற்றி பல தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.
நெல்லிக்காயின் பயன்கள்
- தைராய்டு பிரச்சினைக்கு தைராய்டு சுரப்பை சமநிலையில் வைக்க உதவுகிறது.
- முடி உதிர்வு கட்டுப்படுத்துகிறது.
- இளநரையை தடுக்கிறது.
- வயிற்றில் அசிடிட்டி, வயிற்று உப்புசம் அல்லது வாய்வு பிரச்சனைக்கு தீர்வு அளிக்கிறது.
- செரிமானத்தை மேம்படுத்துகிறது.
- இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்துகிறது.
- இதயத்திற்கு உகந்தது.
- இதில் இருக்கும் வைட்டமின் சி சத்து நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- நம் உடல் எடையை குறைத்து, அதே அளவில் தக்க வைக்கிறது.
- கண்களுக்கு நல்லது.
- சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறது.
- இரத்தத்தை சுத்திகரிக்கிறது.
நெல்லிக்காயில் 5 சுவைகள் இருக்கின்றன. இதில் அறுசுவைகளில் உள்ள உப்பு சுவையை தவிர மற்ற அனைத்து சுவைகளும் நிறைந்தது. ஆயுர்வேத மருத்துவத்தை பொறுத்தவரை சமச்சீரான உணவு என்பது அறுசுவைகள் கொண்டது. நெல்லியின் உப்பு சுவை இல்லாததால் அதை பதப்படுத்தும் போது அதில் உப்பின் சுவையும் கலந்து விடும். இதில் அறுசுவைகள் கலந்து சமச்சீர் உணவாகி விடுகிறது.
இதுவும் உதவலாம்:குளிர்காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அதிசய நன்மைகள்
நெல்லிக்காயை எப்படி பதப்படுத்துவது?
தண்ணீர் - 1 கப்
மஞ்சள் - 1 சிட்டிகை
உப்பு - 1 ஸ்பூன்
நெல்லிக்காய் - 10
எப்படி தயாரிப்பது?
முதலில் நெல்லிக்காயை கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். பின் அதில் சிறு சிறு ஓட்டைகள் போடவும். மஞ்சள் தூள், உப்பு மற்றும் நெல்லிக்காயை 3-4 நாட்கள் நீரில் ஊற விடவும். இது இப்போது சாப்பிட தயாராகி விட்டது.
ஒரு நாளைக்கு ஒரு பதப்படுத்திய நெல்லிக்காய் சாப்பிட வேண்டும். அவ்வாறு செய்ய உங்கள் பிரச்சினைகள் காணாமல் போய் விடும்.
எச்சரிக்கை: உங்களுக்கு மூட்டு வலி இருந்தால் அல்லது நெல்லிக்காய் உங்களுக்கு ஒத்துக் கொள்ளாமல் போகும் பட்சத்தில் அதை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation