பெரும்பாலும் எல்லோருடைய சமையலறையிலும் பிரியாணி இலைகளை வைத்திருப்போம். இந்த நறுமணமிக்க இலைகளை பொடியாகவோ அல்லது முழு இலைகளாகவோ சமையலுக்கு பயன்படுத்தலாம். இது பிரியாணி, புலாவ் குருமா போன்ற உணவுகளுக்கு தனித்துவமான சுவையை வழங்குகிறது.
உணவுகளுக்கு சுவையூட்டும் இந்த பிரியாணி இலைகளில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன. இதைப் பற்றிய முழு விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.
செரிமானத்தை மேம்படுத்துகிறது
உணவில் பிரியாணி இலைகளை சேர்ப்பது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது இரைப்பை-குடல் மண்டலத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி, இரைப்பை சேதத்தைத் தடுக்கிறது. மேலும் அங்குள்ள அமைப்பில் நச்சுத்தன்மையையும் குறைக்கிறது.
பிரியாணி இலையில் உள்ள சேர்மங்கள் வயிற்று பிரச்சனைகளை தீர்க்கவும், மலக்குடல் எரிச்சல் நோயை தணிக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது
பிரியாணி இலைகளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கின்றன. புண் மற்றும் புற்றுநோய்க்கு காரணமான H pylori எனும் பாக்டீரியாவை எதிர்த்து போராடுவதற்கான சத்துக்கள் பிரியாணி இலையில் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது
டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த அரைத்த பிரியாணி இலை காப்ஸ்யூல்களை பயன்படுத்தலாம் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் இதை உறுதிப்படுத்துவதற்காக மேலும் சில ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.
காயங்களை இயற்கையாக குணப்படுத்துகிறது
பிரியாணி இலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது காயமடைந்த பகுதிகளில் ஏற்பட்ட வீக்கத்தை குறைக்க உதவுகிறது. காயங்களினால் ஏற்படும் நோய் தொற்றை தவிர்க்கவும், கொப்புளங்களை சரி செய்யவும் சருமத்திற்கு பிரியாணி இலையின் எண்ணெயை பயன்படுத்தலாம்.
சிறுநீரக கற்களை தடுக்கிறது
பிரியாணி இலைகள் சிறுநீரகக் கற்களை தடுக்க உதவுகின்றன. இது உடலில் உள்ள யூரியாவின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலம் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைப்பதாக ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதை உறுதிப்படுத்த மேலும் சில ஆய்வுகளும் தேவைப்படுகின்றன.
உணவில் பிரியாணி இலைகளை எவ்வாறு பயன்படுத்தலாம்?
- பிரியாணி,புலாவ்,குருமா போன்ற உணவு வகைகளை தாளிக்கும் பொழுது பிரியாணி இலைகளை பயன்படுத்தலாம்.
- வீட்டிலேயே கரம் மசாலா பொடி தயாரிக்கும் பொழுது அதில் கொஞ்சம் பிரியாணி இலைகளையும் சேர்த்து பொடித்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த பிரச்சினை உள்ளவர்கள் உணவில் புளியை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
- வீட்டில் சூப் அல்லது சாஸ் தயாரிக்கும் பொழுது பிரியாணி இலைகளை சேர்க்கலாம். இது உணவிற்கு நல்ல சுவையைக் கொடுக்கும்.
- பிரியாணி இலைகளை வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளலாம். இதை தேவைப்படும் பொழுது சமையலுக்கு பயன்படுத்தலாம். தாளிப்பதற்கு பொடியை விட முழு இலைகளை பயன்படுத்துவதே நல்லது. இவ்வாறு முழு இலைகளை பயன்படுத்தும் பொழுது, உணவை சமைத்து,பரிமாறும் வேளையில் பிரியாணி இலைகளை நீக்கி விடவும். ஏனெனில் இது உணவுக்கு கசப்பு சுவையை கொடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அதிசய நன்மைகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation