
குளிர்காலம் வந்தாலே நம்முடன் பருவ காலத் தொற்றுகளும் உடன் சேர்ந்துவிடும். இதனால் தான் இந்த காலத்தில் சில உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பார்கள். அதிலும் குளிர்காலத்தில் ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதற்கு நிறைய பேர் தயக்கம் காட்டுவார்கள்.

மழை மற்றும் குளிர்காலத்தில் இதை சாப்பிடும் போது சளி, இருமல் பிரச்சனை ஏற்படும் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்படுவது இயல்பான ஒன்று தான். ஆனால் குளிர்காலத்திற்கும் ஆரஞ்சு பழத்திற்கும் ஒரு நல்ல நட்புணர்வு உள்ளது என்று தான் கூற வேண்டும். ஆம் குளிர்காலத்தில் ஆரஞ்சு பழங்களை நாம் அதிகமாக சாப்பிடுவதால் எவ்வித உடல் நலப்பாதிப்பும் நமக்கு ஏற்படாது. மாறாக உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தான் வழங்கக்கூடும். இதோ அவை என்னென்ன என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்..
மேலும் படிங்க: சரும ஆரோக்கியத்திற்கு உதவும் தர்பூசணி!
மேலும் படிங்க:புரத சத்துக்கள் நிறைந்த காய்கறிகளின் லிஸ்ட்!
இதோடு மட்டுமின்றி ஆரஞ்சு பழத்தில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவியாக உள்ளது. இனி குளிர்காலங்களில் கூட தயக்கம் இன்றி நீங்கள் ஆரஞ்சு பழங்களை சாப்பிடலாம். அதே சமயம் சளி, இருமல் போன்ற பிரச்சனை ஏற்பட்டால் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இல்லையென்றால் உங்களுக்கு இருமலை அதிகப்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]