பாஸ்ட் புட் கடைகளில் கிடைக்கும் உணவுகளுக்கு பெரும்பாலான மக்கள் அடிமையாகி விட்டாலும் சமீப காலமாக சில மக்கள் பாரம்பரிய உணவுகள் மீது அதிகளவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக நம்மிடம் இருந்து விட்டு போன நல்ல பழக்கத்தை மீண்டும் பின்பற்ற தொடங்கியுள்ளனர். அது என்னவென்றால் பழைய சாதம்.
அந்தக் காலத்தில் வசதி இல்லாதவர்கள் இரவு நேரத்தில் மீதம் இருக்கும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் அதை குழம்பு ஊற்றியோ அல்லது மோர் ஊற்றியோ உப்பு போட்டு வெங்காயம் அல்லது பச்சை மிளகாயை கடித்து சாப்பிடுவார்கள். இது தான் பழைய சாதத்தின் உருவாக்கம். காலங்காலமாகப் மக்களின் உணவுப்பழக்கத்தில் பழைய சாதம் இருந்தது.
ஆனால் குளிர்பதன பெட்டி வந்துவிட்ட பிறகு நேற்று மீதிய உணவை அப்படியே உள்ளே வைத்து மறுநாள் அதை சூடுபடுத்தி சாப்பிட்டு விடுகிறார்கள். அதனால் பழைய சாதத்திற்கான தேவை இல்லாமல் போய்விட்டது. குளிர்பதன பெட்டியின் பயன்பாடு பெருக பெருக பழைய சாதம் ஏழை மக்கள் சாப்பிடும் உணவு, கிராமத்தில் மட்டுமே பழைய சாதம் சாப்பிடப்படும் என்ற தவறான நம்பிக்கை வந்துவிட்டது. இதன் விளைவாக பழைய சாதம் சாப்பிடுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது.
மீந்து போன சாதத்தை தண்ணீரில் ஊற்றி வைக்கும் போது லாக்டோபாசிலஸ் என்ற பாக்டீரியா உற்பத்தி ஆகி நொதித்தல் செய்முறை நடந்து புரோபயாட்டிக் உணவாக மாறுவது தான் பழைய சாதம். தயிர், மோர் போல இயற்கையாக கிடைக்ககூடிய புரோபயாட்டிக் உணவுகளில் பழைய சோறும் ஒன்றாகும். காலையில் பழைய சோறு சாப்பிடுவதால் உங்கள் குடல் குளிர்ச்சியடையும்.
மேலும் படிங்க எலும்பு சூப் குடிக்க வேண்டியதன் அவசியம் தெரியுமா?
மேலும் படிங்க தைராய்டு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்
இது போன்ற ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகளுக்கு ஜெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]