herzindagi
image

ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கண் திருஷ்டி, திருமண தடை மற்றும் பணப் பிரச்சனையை தீர்க்கும்

ஆன்மீக வழியாக மஞ்சளை பயன்படுத்தி வாழ்க்கையில் உள்ள சில தடைகளை நீக்க முடியும். குறிப்பாக மக்கள் அதிகம் அவதிப்படும் பிரச்சனை கண் திருஷ்டி, திருமண தடை மற்றும் பணப் பிரச்சனையாகும். இவை அனைத்தையும் நொடி பொழுதில் தீர்க்க மஞ்சள் உதவுகிறது. 
Editorial
Updated:- 2025-06-26, 10:29 IST

இந்திய சமையலறைகளில் மஞ்சள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உணவை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது. ஆயுர்வேதத்தில் மஞ்சள் ஒரு மருந்தாகக் கருதப்படுகிறது. அதேபோல் ஆன்மீக வழிப்பாட்டிலும் மஞ்சள் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது, குறிப்பாக இந்து மாதத்தில். அனைத்து தெய்வ வழிபாட்டிலும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளன. அதேபோல் மஞ்சளை கொண்டு ஆன்மீக வழியில்  தீர்வுகள் எப்படி பெறலாம் என்பதை பார்க்கலாம். 

மஞ்சள் குரு பகவானுக்கு பிடித்த பொருளாகும், மஞ்சள் செழிப்பு, செல்வம், திருமண வாழ்க்கை, குழந்தைகள் மற்றும் திருமணத்திற்கு காரணியங்களை தடையின்றி தடத்த உதவும். குரு உங்களை பார்த்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறார். அத்தகைய சூழ்நிலையில், மஞ்சளைப் பயன்படுத்தி வாழ்க்கையை மகிழ்ச்சியை எப்படி வரவழைக்கலாம் என்பதை பார்க்கலாம்.

 

மேலும் படிக்க: கஷ்டத்தில் இருக்கும் பக்தர்கள் சனீஸ்வரனை இப்படி வழிப்பட்டால் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அள்ளித் தருவார்

 

கண் திருஷ்டி பிரச்சனைகளை தீர்க்க மஞ்சள் உதவுகிறது

 

  • கண் திருஷ்டி நீங்க, மஞ்சளை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொண்டு, இவற்றை புதிய வெள்ளை துணியில் நனைத்து எடுத்துக்கொள்ளவும். மஞ்சள் துணியில் சிறிது ஓமத்தை சேர்த்து, கருப்பு நூலால் கட்டவும். அதன் பிறகு, கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்ட நபர் கைகளில் கட்டிக்கொள்ளவும். ஒரு வாரம் கழித்து, அதை ஓடும் நீரில் விட்டுவிடவும். இதைச் செய்வதன் மூலம், அந்த நபரின் மீது கண் திருஷ்டி பாதிப்பு குறைகிறது. இது தவிர, ஒருவர் கண் திருஷ்டி நீங்க மஞ்சள் நீரில் தொடர்ந்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்ட ஒருவர், இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், கடுகு எண்ணெயில் மஞ்சளைக் கலந்து, தொப்புளில் தடவினால், இந்த தீமையின் பாதிப்புகளிலிருந்து அவருக்கு விரைவான நிவாரணம் கிடைக்கும்.

_Spiritually  evil eye

திருமணத் தடைகள் நீங்க மஞ்சளில் செய்யும் பரிகாரம்

 

  • திருமணத்தில் தடைகளை எதிர்கொள்ளும் நபர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஓடும் நீரில் ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் போட்டு, நீரோட்டம் உள்ள இடத்தில் ஊற்ற வேண்டும், இதைச் செய்வது நன்மைகளையும் தரும்.
  • திருமணத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நபர்கள் மஞ்சள் துணியில் ஒரு மஞ்சளை கட்டி, அதை 11 வியாழக்கிழமைகள் தன் கூடவே வைத்திருக்க வேண்டும். அதன்பின் தெய்வத்திற்கு காணிக்கையாக செலுத்தினால், ஜாதகத்தில் பலவீனமான குருவின் பிரச்சனை தீரும்.

_marriage abstcral

 

மஞ்சளை கொண்டு பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறைகள்

 

  • எல்லோரும் பணக்காரர்களாக இருக்க விரும்புகிறார்கள், ஆனால் கடினமாக உழைத்த பிறகும் போதுமான பணம் சம்பாதிக்க முடியவில்லை என்றால், விநாயகருக்கு மஞ்சள் முடிச்சுகளால் ஆன மாலையை அர்ப்பணிக்கவும். இந்த வேலையை நீங்கள் எந்த நாளிலும், அதாவது புதன் அல்லது வியாழக்கிழமைகளில் செய்யலாம்.
  • ஒரு சிவப்பு துணியில் மஞ்சள் கட்டியைக் கட்டி, அதை உங்கள் பெட்டகத்தில் வைத்து தொடர்ந்து வழிபடுங்கள். இதைச் செய்வதன் மூலம், லட்சுமி தேவியை மகிழ்விக்க முடியும்.
  • வர வேண்டிய இடத்தில் இருந்து பணத்தைப் பெற விரும்பினால், அரிசி தானியங்களுக்கு மஞ்சள் பூசி ஒரு சிவப்பு துணியில் கட்டி, உங்கள் பணப்பையில் வைக்கவும். இதைச் செய்வதன் மூலம், சிக்கிய பணத்தை விரைவாகப் பெறுவீர்கள்.

turmeric

மஞ்சளை கொண்டு மற்ற பரிகாரங்கள்

 

  • ஒரு மஞ்சள் கட்டியில் நூலைக் கட்டி, தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்திருந்தால், உங்களுக்கு கெட்ட கனவுகள் வருவதை நிறுத்தும்.
  • விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் சிலைக்கு தினமும் ஒரு சிட்டிகை மஞ்சள் காணிக்கை செலுத்தினால், உங்களுக்கு விருப்பமான வாழ்க்கைத் துணை கிடைக்கும்.
  • சூரிய கடவுளுக்கு மஞ்சள் கலந்த தண்ணீரை அர்ப்பணித்தால், அது ஜாதகத்தில் சூரிய தோஷத்தின் விளைவைக் குறைக்கிறது.

 

மேலும் படிக்க: இந்த அரிய வகை பூக்களை உங்களை வாழ்க்கையில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தால், நல்லது நடக்கும்

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]