
தென்மேற்கு பருவ காற்றினால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் பெய்யும் சாரல் மழை இதமாக ஒருபுறம் இருந்தாலும், குளிருக்கு இதமாக ஏதாவது நொறுக்குத் தீனிகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்படும். குழந்தைகள் உள்ள வீடுகளில் அவர்களுக்காகவே முறுக்கு, பஜ்ஜி, பணியாரம், அதிரசம், பால் கொழுக்கட்டை போன்ற பல விதமான ரெசிபிகளைச் செய்துக் கொடுப்பார்கள்.
இந்த ரெசிபிகள் அனைத்தும் சில நேரங்களில் சளிப்பை நமக்கு ஏற்படுத்தி விடலாம். இதைத் தவிர்க்கவும் குளிர்காற்றிற்கு இதமாக ஏதாவது கிரிப்ஸியாக சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இதோ கேரள ஸ்டைலில் வாழைப்பழத்தைக் கொண்டு பழ பூரி செய்து சாப்பிடுங்கள். காரம் மற்றும் இனிப்பு கலந்து சுவையுடன் இருக்கும் இந்த பூரி மனதை புத்துணர்ச்சியாக்குவதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும். இதோ அடிக்கும் மழைக்கு இதமான பழ பூரி ரெசிபியை எப்படி செய்ய வேண்டும்? என்பது குறித்த ரெசிபி டிப்ஸ்கள் உங்களுக்காக.
மேலும் படிக்க: ஸ்டார் ஹோட்டல் தரத்திற்கு கோபி மஞ்சூரியன் வேண்டுமா? இப்படி செய்யவும்-சிம்பிள்!
மேலும் படிக்க: குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சப்பாத்தி!
வாழைப்பழத்தில் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள், கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் சி, வைட்டமின் பி 6 போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது. மேலும் வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் தசை ஆரோக்கியம் மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]