பள்ளிவாசல் நோன்பு கஞ்சி வீட்டிலேயே செய்யலாம்; ரமலான் மாத ஸ்பெஷல்

ரமலான மாதத்தின் நோன்பு கஞ்சி அருந்தாத மனிதர்களே இருக்க முடியாது. பள்ளிவாசலில் கிடைக்கும் நோன்பு கஞ்சியை வீட்டிலும் செய்யலாம். மிதமான சூட்டில் நோன்பு கஞ்சி குடிப்பதற்கு வேற லெவலில் இருக்கும்.
image

புனித ரமலான் மாதத்தில் நாள் முழுக்க நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் மாலை நேரத்தில் நோன்பு திறக்கும் போது நோன்பு கஞ்சி குடிப்பது வழக்கம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் மத பாகுபாடின்றி அனைவருக்கும் இந்த நோன்பு கஞ்சி வழங்குவார்கள். ரமலான் மாதம் முழுக்க நோன்பு கஞ்சி தயாரிக்கப்படும். அரிசி, மட்டன் கறி, தேங்காய் பால், பாசிப் பருப்பு போட்டு செய்யக்கூடியது இந்த நோன்பு கஞ்சி. காலையில் இருந்து நோன்பு திறந்தவர்களுக்கு குறைவான நேரத்திலேயே மொத்த ஆற்றலையும் கொடுக்கும்.

nombu kanji recipe

நோன்பு கஞ்சி செய்ய தேவையானவை

  • சீரக சம்பா அரிசி
  • மட்டன் கறி
  • சின்ன வெங்காயம்
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • நல்லெண்ணெய்
  • நெய்
  • தேங்காய் பால்
  • பட்டை
  • கிராம்பு
  • ஏலக்காய்
  • பிரியாணி இலை
  • பச்சை மிளகாய்
  • கொத்தமல்லி
  • புதினா
  • உப்பு

குறிப்பு : சீரக சம்பா அரிசி இல்லையெனில் பச்சரிசி கூட பயன்படுத்தலாம்.

நோன்பு கஞ்சி செய்முறை

  • குக்கரில் நோன்பு கஞ்சி செய்வதற்கு இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய், இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.
  • அதன் பிறகு சிறிய துண்டு பட்டை, நான்கு கிராம்பு, நான்கு ஏலக்காய், ஒரு பிரியாணி இலை, அரை டீஸ்பூன் வெந்தயம் சேருங்கள்.
  • இதன் பிறகு ஐந்து சின்ன வெங்காயம், ஐந்து பல் பூண்டு இடித்து சேர்த்து ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்கவும்.
  • அடுத்ததாக ஒரு மூன்று பச்சை மிளகாய், ஒரு தக்காளியை நறுக்கி சேர்த்து கை நிறைய கொத்தமல்லி, புதினா போட்டு கலக்கவும்.
  • தக்காளியின் பச்சை வாசனை போன பிறகு இரண்டு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு பேஸ்ட் சேருங்கள்.
  • 100 கிராம் மட்டன் கொத்துக்கறியை தண்ணீரில் நன்கு கழுவி உப்பு சேர்த்து மட்டனை வேக விடுங்கள்.
  • முன்னதாக 150 கிராம் சீரக சம்பா அரிசி, 25 கிராம் பாசிப்பருப்பை தண்ணீரில் போட்டு 20 நிமிடங்களுக்கு ஊறவைத்துவிடுங்கள்.
  • இப்போது அரிசி, பாசிப்பருப்பு சேர்த்து ஆறு கப் தண்ணீர் ஊற்றவும். இப்போது தேவையான அளவு உப்பு போட்டு குக்கரை மூடி 5 நிமிடங்களுக்கு காத்திருங்கள்.

மேலும் படிங்கமத்தி மீன் குழம்பு வீடெங்கும் கம கமக்க இப்படி செஞ்சு ருசி பாருங்க

அரிசி, மட்டன் நன்கு வெந்த பிறகு கரண்டி வைத்து மசித்துவிட்டு 50 மில்லி தேங்காய் பால் ஊற்றுங்கள். ரமலான் நோன்பு கஞ்சி ரெடி.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP