herzindagi
image

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம், மொறுமொறு பொரி உருண்டை ரெசிபி

கார்த்திகை தீப திருநாளுக்கான கார்த்திகை அப்பம் மற்றும் பொரி உருண்டை செய்முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். மாலை நேரத்தில் வீட்டை விளக்குகளால் அலங்கரித்த பிறகு கார்த்திகை அப்பம், பொரி உருண்டையை குடும்பத்தினரோடு ருசித்திடுங்கள்...
Editorial
Updated:- 2024-12-09, 16:37 IST

தமிழகத்தில் விமரிசையாக கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருநாளில் தெய்வத்திற்கு கார்த்திகை அப்பம், பொரி உருண்டை கொண்டு நெய்வேத்தியம் செய்வது சிறப்பானது. இந்த இரண்டு ஸ்வீட்களையும் அரை மணி நேரத்திற்குள் தயாரித்து விடலாம். கார்த்திகை அப்பம் என்பது நெய் அப்பம் என்றும் அழைக்கப்படுகிறது. அப்பம், பொரி உருண்டை செய்வதற்கு வெல்லம் போதுமானது. சரியான அளவுகளில் செய்தால் கார்த்திகை அப்பம் பஞ்சு போலவும், பொரி உருண்டை மொறுமொறுப்பாகவும் வரும்.

கார்த்திகை அப்பம் செய்ய தேவையானவை

  • ரவை
  • வெல்லம்
  • அரிசி மாவு
  • தேங்காய் துருவல்
  • தண்ணீர்
  • நெய்
  • ஏலக்காய் தூள்
  • உப்பு

கார்த்திகை அப்பம் செய்முறை

  • கடாயில் 150 கிராம் அளவிற்கு பவுடர் வெல்லம் எடுத்து அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
  • பாத்திரத்தில் ஒரு கப் ரவை எடுத்து வெல்லத்தை ஊற்றவும். இரண்டையும் கலந்து விட்டு 10 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.
  • அடுத்ததாக மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும். இதனிடையே அரை கப் துருவிய தேங்காய் சேருங்கள்.
  • தோசை மாவு பதத்தில் கார்த்திகை அப்பம் மாவு இருக்க வேண்டும். அரைத்த பிறகு கால் கப் அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு, அரை ஸ்பூன் ஏலக்காய் தூள், ஒரு ஸ்பூன் நெய், மூன்று ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும்.
  • 10 நிமிடங்களுக்கு பிறகு கடாயில் கடலெண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி மிதமான தீயில் ஒரு கரண்டி மாவு ஊற்றி இரண்டு பக்கம் நிறம் மாறும் வரை வறுத்தெடுக்கவும். கார்த்திகை அப்பம் ரெடி.

மேலும் படிங்க முட்டை இல்லாத மயோனைஸ்; வீட்டில் இப்படி செஞ்சு பாருங்க

pori urundai

பொரி உருண்டை செய்ய தேவையானவை

  • பொரி
  • வெல்லம்
  • தண்ணீர்
  • பொட்டுக்கடலை

பொரி உருண்டை செய்முறை

  • சிறு வயதில் இந்த பொரி உருண்டையை எல்லோரும் ருசித்து இருப்பீர்கள். இதை செய்வதற்கு 150 கிராம் பவுடர் வெல்லத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
  • அதன்பிறகு வடிகட்டுங்கள். கடாயில் மீண்டும் வெல்லத்தை ஊற்றி சுண்டக் காய்ச்சவும். மிட்டாய் பதத்திற்கு வந்தவுடன் அரை ஸ்பூன் நெய் ஊற்றி மூன்று கப் பொரி மற்றும் விருப்பம் இருந்தால் பொட்டுக்கடலை சேர்க்கவும்.
  • நன்கு கலந்துவிட்டு சூடு சற்று குறைந்தவுடன் உருண்டை பிடித்து 5 நிமிடம் கழித்து ருசித்து பாருங்கள். மொறுமொறுப்பான பொரி உருண்டையின் சுவையை உணர்வீர்கள்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image credits : Youtube

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]