தீபத்தின் ஒளிகள் எப்போதும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பிரகாசத்தைக் கொடுப்பதாக நம்பப்படுகிறது. அதிலும் கார்த்திகை மாத பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாள் தீபத்திற்கு ஏற்ற நாளாகவே விளங்குகிறது. இந்த நாளை ஒவ்வொரு தமிழர்களும், தமது இல்லங்களிலும், கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றனர். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பெரிய கார்த்திகை எனப்படும் தீபத் திருநாள் கொண்டாடப்படவுள்ளது.
இந்த நாளில் நமது முன்னோர்கள் பண்டைய காலம் தொட்டே மாலை வேளைகளில் வீட்டிற்கு உள்ளேயும் வாசல்களிலும் விதவிதமான விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். இவ்வாறு இத்திருநாளில் தீபங்கள் ஏற்றுவது, கோவில்களில் சொக்கப்பனை எரிப்பது என்பது போன்ற பழக்க வழக்கங்கள் எப்படி சிறப்பானதோ? அதுப்போன்று தான் பனையோலைக் கொழுக்கட்டையும், பொரி உருண்டை பிரசாதமும் இந்த நாளின் சிறப்புகளில் ஒன்றாக உள்ளது. இதோ நீங்களும் இந்நாளில் இந்த பனையோலைக் கொழுக்கட்டைகளை வீடுகளில் செய்து தீப ஒளியைக் கொண்டாட வேண்டுமா,? இதோ உங்களுக்காகவே இந்த ரெசிபி டிப்ஸ்...
மேலும் படிங்க குளிர்காலத்தில் புத்துணர்ச்சி அளிக்கும் டாப் 5 சூப்ஸ்
மேலும் படிங்க ரவா லட்டு முதல் பாலாடை பாயாசம் வரை! தித்திக்கும் கேரளா
பச்சை பனை ஓலை வாசனையுடன் உடலுக்கு ஆரோக்கியத்தைச் சேர்க்கும் இந்த பனையோலை கொழுக்கட்டையை இதுப்போன்ற வழிமுறைகளோடு வீடுகளில் மிகவும் சுலபமாக நீங்கள் செய்ய முடியும். அதிலும் சுக்கு, ஏலக்காய் சேர்த்து செய்துள்ள இந்த ரெசிபி மேற்கொள்ளப்படுவதால் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதோடு குளிர்காலத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்றாகவும் இது பார்க்கப்படுகிறது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]