சமையல் செய்வதற்கு எப்போதுமே சில பொருட்களை அடுப்படியில் வைத்திருப்பது அவசியம். சமைத்து கொண்டிருக்கும் போது பாதியில் அடுப்பை ஆஃப் செய்துவிட்டு கடைக்கு சென்று பொருள் வாங்க முடியாது. அந்த காலத்தில் திருமணம் ஆகி வேறு ஊர் செல்லும் பெண்ணுக்கு பெரிய பாத்திரங்களில் சமைப்பதற்கு தேவையான பொருட்களை போட்டு கொடுப்பார்கள். 2-3 மாதங்களுக்கான பொருட்கள் அதில் இருக்கும். அடுத்தமுறை அம்மா வீட்டிற்கு செல்லும் போது மீண்டும் சாம்பார் பொடி, மிளகாய் தூள், குழம்பு தூள் எடுத்துச் செல்வார்கள். இதனால் சமைக்கும் போது எந்தவொரு மசாலா பொடியும் இல்லாமல் போகாது. அப்போதெல்லாம் மாத தொடக்கத்தில் மாவு மில்லுக்கு சென்று சமையலுக்கு தேவையான பொருட்களை அரைத்து மாதம் முழுக்க பயன்படுத்துவார்கள். பாக்கெட்களில் மசாலா பொடி வந்த பிறகு திருமணம் ஆன மகளுக்கு பொருட்கள் கொடுக்கும் வழக்கத்தை தாய்மார்களும் மறந்துவிட்டனர். இந்த பதிவில் கரம் மசாலா, குழம்பு மிளகாய் தூள் எப்படி செய்வது என பார்க்கலாம். குழம்பு மிளகாய் தூளும், ஒரு காய்கறியும் போதும் கால் மணி நேரத்தில் ஒரு குழம்பு தயாரித்து விடலாம். கரம் மசாலா உணவின் சுவையை அதிகப்படுத்தி கொடுக்கும். கரம் மசாலா, குழம்பு மிளகாய் பொடி செய்முறையில் சரியான விகிதத்தில் பொருட்கள் பயன்படுத்த வேண்டும்.
மேலும் படிங்க வீட்டிலேயே தயாரித்த சாம்பார், ரசப் பொடி; சுவையும் மணமும் அள்ளுதே
குண்டு மிளகாய் ஒரு கிலோ, கறிவேப்பிலை 150 கிராம், வெந்தயம் 50 கிராம், சீரகம் 100 கிராம், கடலை பருப்பு 100 கிராம், துவரம் பருப்பு 100 கிராம், மஞ்சள் 100 கிராம், முழு தனியா ஒரு கிலோ, மிளகு 100 கிராம், சுக்கு 100 கிராம், கடுகு 100 கிராம் ஆகியவற்றை இரண்டு நாட்களுக்கு வெயிலில் காய வைக்கவும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]