இரத்தக்குழாய்களில் குறிப்பாக இருதயத்திற்கு செல்லக்கூடிய இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட என்ன காரணம்? எதனால் ரத்தக்குழாய்களில் அடைப்பு வருகிறது அதற்கான ரிஸ்க் ஃபேக்டர்ஸ் என்னென்ன? மாரடைப்பு ஏன் எப்படி வருகிறது? அதிகரிக்கும் இள மரணங்களுக்கு காரணம் என்ன? குறிப்பாக 35 வயதை கடந்த பெரும்பாலானவர்களுக்கு வரும் சந்தேகம் இருதயத்தில் இரத்தக்குழாய் அடைப்பு இருக்குமா?
மேலும் படிக்க: கொலஸ்ட்ராலை 21 நாட்களில் விரட்ட- மல்லி, வெந்தய விதைகளை இப்படி பயன்படுத்துங்கள்
மாரடைப்பு வர வாய்ப்பு இருக்கிறதா? இந்த பயம் அதிகரித்து வருகிறது. மாறிவரும் வாழ்க்கை சூழ்நிலையில் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வாயு பிடிப்பு ஏற்பட்டாலே மாரடைப்பு இரத்தக்குழாய் அடைப்போ என்று தற்போது அனைவருக்கும் பயம் வர ஆரம்பித்துள்ளது. ஆனால் உண்மையாக இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக்குழாய்களில் அடைப்பு இருக்கிறதா? அது எந்த அளவிற்கு இருக்கிறது? அது மாரடைப்பாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? ஒவ்வொருவருக்கும் எந்த விதமான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் தேவை என்பதை தெரிந்து கொள்ள ஏகப்பட்ட பரிசோதனைகள் தற்போது வந்துவிட்டது.
மாரடைப்புக்கும் இரத்தக்குழாய் அடைப்பிற்கும் 60 இலிருந்து 70 சதவிகிதம் காரணங்கள் இருதயம் சம்பந்தமில்லாத விஷயங்கள்தான். இருதயத்தில் வரக்கூடிய இரத்தக் குழாய் அடைப்பு அதனால் வரக்கூடிய மாரடைப்பு இதற்கு நெஞ்சு வலி மட்டுமல்லாமல் ஏகப்பட்ட அறிகுறிகள் உண்டு. இருதய ரத்தக்குழாய் அடைப்பு என்பது ஒருவருக்கு உடனடியாகவும் ஏற்படலாம் அல்லது மாத கணக்கில் சிறு சிறு பாதிப்புகளை அறிகுறிகளையும் காண்பித்து பின்னரும் ஏற்படும்.திடீரென ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது தான் நம்மில் பெருமாலானவர்களுக்கு தெரிந்த ஹார்ட் அட்டாக். இருதயத்தில் இரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டு நெஞ்சுவலி வருகிறது என்றால் அதனை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
ஆஞ்சைனா என்பது இரத்தக்குழாயில் 50% முதல் 60 %வரை ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறது என்று அர்த்தம். இந்த பிரச்சனை உள்ளவர்கள் படி ஏறும் போது அல்லது கடின வேலை செய்யும்போது நெஞ்சு வலி ஏற்படக்கூடும். அப்படி வரும் நெஞ்சுவலி சிறிது நேரம் ஓய்வெடுக்கும் போது நின்று விடுகிறது அல்லது மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் நின்று விடுகிறது என்றால் உங்களுக்கு இரத்தக்குழாயில் அடைப்பு உள்ளது என்று அர்த்தம். இதனை மருத்துவர் ரீதியாக கிளாசிக்கல் ஆஞ்ஜைனிங் பெயின் என்று கூறுவார்கள்.
நெஞ்சு வலி கடினமான வேலைகளை செய்யும் போது வருகிறது சிறிது நேரத்தில் தானாகவே சென்று விடுகிறது என்றால் அது 90% ரத்தக்குழாய் அடைப்பாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
மயோகார்டியல் இன்பார்க்ஷன் என்பது மொத்தமாக ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அதனால் இரத்தக்குலாயே முழுவதும் சேதமடையும் நிலையில் உள்ளது தான் மயோகார்டியல் இன்பார்க்ஷன் நிலை என மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது.
இதய நோயின் அறிகுறிகளில் மார்பு வலி, மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம், இதயத் துடிப்பு, வயிற்று வலி, குமட்டல், சோர்வு, கை வலி, தாடை, முதுகு மற்றும் கழுத்தில் வலி, வியர்வை, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, வீக்கம் மற்றும் பல அடங்கும்.
உயர் இரத்த அழுத்தம் இதய நோய்க்கு முக்கிய காரணமாகும். இந்த நிலையில், தமனிகளின் புறணி சேதமடைந்து, பிளேக் உருவாவதற்கு வழிவகுக்கிறது. உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் அதிக சோடியம் உட்கொள்வதால் ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
புகைபிடித்தல் இரத்த நாளங்கள் மற்றும் உடலின் பிற உறுப்புகளை பல வழிகளில் சேதப்படுத்துகிறது. இது கொழுப்பின் அளவை உயர்த்தலாம், இரத்தத்தை தடிமனாக்கலாம், இரத்த நாளங்களின் புறணியை சேதப்படுத்தலாம், மேலும் இரத்த நாளங்களை அடைக்கலாம் அல்லது குறுக்கலாம். இவை அனைத்தும் இதய நோய்க்கு வழிவகுக்கிறது.
அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிக கொழுப்பு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிக கொழுப்பு தமனிகளில் படிந்து, அவை குறுகுவதற்கு அல்லது அடைப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும். இது இதயம் மற்றும் மூளை உட்பட உடலின் பிற பகுதிகளுக்கு போதுமான இரத்த விநியோகத்திற்கு வழிவகுக்கிறது.
அதிகப்படியான நீரிழிவு காலப்போக்கில் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். இதன் விளைவாக, மூளையில் உள்ள இரத்த நாளங்கள் அடைக்கப்பட்டு, இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. உடல் பருமன் உள்ளவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த காரணிகள் அனைத்தும் இதய நோய்க்கு வழிவகுக்கும்.
இப்போதெல்லாம், மக்கள் உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், பதப்படுத்தப்பட்ட அல்லது தொகுக்கப்பட்ட உணவுகள் மற்றும் குறைந்த அல்லது ஊட்டச்சத்து மதிப்பு இல்லாத உணவுகளை உட்கொள்கிறார்கள். மோசமான உணவுத் தேர்வுகளுக்கு மேலதிகமாக, பெரும்பாலான மக்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை உட்கார்ந்த நிலையில் செலவிடுகிறார்கள். இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
மாரடைப்பு வலி என்றாலே இடது பக்கம் வரும் என்று நினைக்கின்றோம் ஆனால் அப்படி இல்லை நெஞ்சின் நடுப்பகுதியில் வரும் வலி தான் மாரடைப்பு வலி. மேலும் இது நெஞ்சில் மட்டுமல்லாது வயிற்றின் மேல் பகுதி, இடது கை,தோள்பட்டை, கீழ் தாடை,கழுத்து,முதுகு உள்ளிட்டவற்றிற்கும் இரத்தக்குழாய் அடைப்பினால் வரும் மாரடைப்பானது பரவி தாங்க முடியாத வலியை தரும். நெஞ்சு வலியுடன் சேர்ந்து அதிக வியர்வை வெளியேற்றம், குமட்டல்,பதட்டம், படபடப்பு போன்றவை தோன்றும்.
ECG- மாரடைப்பு, இரத்தக் குழாய் அடைப்பு சந்தேகம் உள்ளவர்கள் கண்டிப்பாகவும் எளிதிலும் எடுத்துக் கொள்ளக்கூடிய வகையிலான பரிசோதனையில் ஒன்று ECG இந்த பரிசோதனையை கண்டிப்பாக செய்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: இந்த வீட்டு வைத்தியம் நரம்புகளில் சிக்கியுள்ள அழுக்கு, கொலஸ்ட்ராலை கரைத்து விரட்டும் - அதற்கான சரியான வழியை தெரிந்து கொள்ளுங்கள்!
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil
Image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]