வாயு அடைப்பால் பலூன் போல் மாறிய வயிற்றை சரி செய்வதற்கு பாட்டி வைத்தியம் பின்பற்றுங்க

வயிற்று பகுதியில் உருவாகும் வாயு நமக்கு பல தொல்லைகளை உண்டாக்கும். வயிற்று வலி, புளித்த ஏப்பம் மற்றும் வாயு தொல்லையால் அவதிப்படுவோம். அடைபட்ட வாயு காராணமாக சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது சிக்கலாகும். வாயு அடைப்பால் பலூன் போல் மாறிய வயிற்றை சரி செய்திட பாட்டி வைத்தியம் பின்பற்றுங்கள்.
image

வயிற்றில் வாயு உருவாவதற்கு, தேங்குவதற்கு பல காரணங்கள் உண்டு. வயிற்றில் அடைபட்ட வாயுவை குணப்படுத்த மருந்து மாத்திரை தேவையில்லை, பாட்டி வைத்தியத்தை முறையாக தெரிந்து வைத்திருந்தால் போதுமானது. வாயு தொல்லைக்கு மருந்து மாத்திரை பரிந்துரை செய்வதை மருத்துவர்களும் விரும்புவதில்லை. உணவு சாப்பிட்ட பிறகு வயிறு பலூன் போல் உப்பினால் பாட்டி வைத்தியத்தின்படி ஒரு பவுடரை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்துவிடவும். இந்த பாட்டி வைத்தியம் ஆயுர்வதே தீர்வாகும். உடனடி நிவாரணமும் கிடைக்கும்.

trapped gas

பிடித்தமான உணவு என்றாலும் அளவோடு சாப்பிடும் பழக்கத்திற்கு மாறுங்கள். வயிற்றில் வாயு உருவாவதற்கு இரண்டு முக்கிய காரணங்களே. அவரச கதியில் சாப்பிடுவது, வேக வேகமாக தண்ணீர் குடிப்பது மற்றும் பேசிக் கொண்டே சாப்பிடுவது ஒரு காரணமாகும். நார்ச்சத்து, மாவுச்சத்து, இனிப்பு நிறைந்த உணவுகள் சரியாக ஜீரணம் ஆகாமல் சிறு குடல் வழியாக பெருங் குடல் சென்று பாக்டீரியாக்களால் வாயு ஆக மாற்றப்படுகிறது.

வயிற்றில் அடைபட்ட வாயுவிற்கு பாட்டி வைத்தியம்

  • சிவரிக்கீரை எனும் செலரி வயிற்றில் அடைப்பட்ட வாயுவை அகற்றிட உதவும். சிவரிக்கீரை சாப்பிட்டால் அடைபட்ட வாயு வெளியேறும். வயிற்றில் பிடிப்பு நீங்கும்.
  • சிவரிக்கீரை இரைப்பையில் திரவ சுரப்பை அதிகரித்து செரிமானத்தை எளிதாக்கும். இதன் காரணமாக வயிற்றில் வாயு உருவாகாது.
  • சிவரிக்கீரை, பெருங்சீரகம், சீரகம், கருப்பு இவை வயிற்று பகுதி வாயுவை குறைக்கும்.
  • சீரகம் செரிமானத்திற்கு உதவி அசிடிட்டியை தவிர்க்கும். இது வயிற்றிலும் ஒட்டுமொத்த உடலிலும் உள்ள நச்சுகளை வெளியேற்றும். இதன் விளைவாக வயிற்றில் அடைபட்ட வாயு வெளியேற்றப்படும்.
  • பெருஞ்சீரகம் ஆன்டிஆக்ஸிடண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது வயிற்றில் வாயு உருவாவதை தடுக்கும்.
  • அதே போல கருப்பு உப்பு உணவை எளிதில் ஜீரணமாக்க உதவும்.

அடைபட்ட வாயுவுக்கு பாட்டி வைத்தியம்

  • ஓமம், சீரகம், பெருஞ்சீரகம் தலா ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். பெருங்காயம் ஒரு சிட்டிகை மற்றும் கருப்பு உப்பு முக்கால் ஸ்பூன் தேவைப்படும்.
  • பேனில் இவை அனைத்தையும் போட்டு சில நிமிடங்களுக்கு வறுக்கவும். அதன் பிறகு பொடியாக அரைக்கவும். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு கலந்து குடிக்கவும்.
  • வயிற்றில் அடைபட்ட வாயு வெளியேறி வயிறு சுத்தமாகும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP