தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது காலம் காலமாகப் பின்பற்றப்படும் நடைமுறையாக இருக்கிறது. இதன் பின்னணி என்ன ? எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள்குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது “ஆழமான அடையாளத்தின்” பாரம்பரியமாகப் பார்க்கப்படுகிறது. எண்ணெய் தேய்த்து குளிப்பது உடலைச் சுத்தப்படுத்துவதற்கு மட்டுமல்ல உடல் மற்றும் ஆன்மாவின் ஆன்மிக சுத்திகரிப்பாகும். தீபாவளியன்று விடியற் காலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது புதிய தொடக்கத்திற்கான களமாக அமைகிறது.
சூரியன் உதிக்கும் முன் விடியற்காலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது தீபாவளி பண்டிகையைத் தூய்மையுடனும், பக்தியுடனும் வரவேற்பதற்கான அடையாளமாக விளங்குகிறது. இந்த நடைமுறையானது குடும்பத் தலைவரிடம் தொடங்கி குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களாலும் பின்பற்றப்படுகிறது. சிகிச்சை பண்புகளுக்குப் பெயர் பெற்ற எள் எண்ணெய், இந்தக் குளியலுக்கு பயன்படுத்தப்படுகிறது. சிலநேரங்களில் சந்தன பேஸ்ட், கிராம்பு அல்லது மஞ்சள் போன்ற நறுமண பொருட்கள் அவற்றின் சுத்திகரிப்பு பண்புகளுக்காக எண்ணெய்யில் சேர்க்கப்படுகின்றன. உடலில் எண்ணெய் தேய்ப்பதற்கு முன்பாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். எண்ணெய்யை கொஞ்சம் சூடுபடுத்திய பிறகு உடலில் தேய்த்து மஸாஜ் செய்யும்போது, அதில் உள்ள மூலிகைகளின் குணப்படுத்தும் பண்புகளும் தோலில் ஊடுருவுகின்றன.
இது உடலைத் தளர்த்துவது மட்டுமல்லாமல் சருமத்தை வளர்க்கவும் உதவுகிறது. உடல் முழுவதும் எண்ணெய்யை தேய்த்த பிறகு சூடான நீரில் குளியல் போடுங்கள். இதன் மூலமாக உடலில் உள்ள அசுத்தங்கள் அகற்றப்பட்டு, மிகுந்த புத்துணர்ச்சி கிடைக்கும்.
எண்ணெய் தேய்த்து குளிப்பதன் பலன்கள்:
உடலில் நீரேற்றம் மற்றும் ஈரப்பதம் :
சூடான எண்ணெய் சருமத்தில் ஊடுருவி ஈரப்பதத்தை தருகிறது. குறிப்பாகக் குளிர்கால மாதங்களில் சருமம் வறண்டு செதில்கள் உண்டாகும்போது எண்ணெய் தேய்த்து குளித்தால், அது சருமம் வறட்சி அடைவதற்கு எதிராகப் போராடும்.
சீரான ரத்த ஓட்டம் :
சூடான எண்ணெய்யை உடலில் தேய்த்து மஸாஜ் செய்யும்போது உடலில் ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் தோலின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. ரத்த ஓட்டம் சீராக இருப்பதனால் சரும செல்களுக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜனும், ஊட்டச்சத்தும் மேம்படும்.
வயது முதிர்வு தவிர்ப்பு :
வழக்கமாக எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் சருமம் நன்கு ஊட்டமடையும் நிலையில் வயது முதிர்ந்து காணப்படுவதை தவிர்க்கலாம்.
பளபளக்கும் சருமம் :
எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிப்பது சருமத்தை இயற்கையாகவே பளபளப்படுத்தி பிரகாசமாகக் காண்பிக்கும்.
மனரீதியான தளர்வு :
எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலில் மட்டுமின்றி மனதிலும் தளர்வு ஏற்படுகிறது. இதனால் மன அழுத்தம் குறைந்து, மனதை அமைதிப்படுத்தவும் முடியும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]