குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளரும் விதவிதமாக சமைத்து அசத்துகின்றனர். இந்த வாரம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ள எபிசோடில் விவசாயி நந்தகுமார் இலுப்பை பூ சம்பா அரிசியை வைத்து கூட்டாஞ்சோறு சமைத்து நடுவர்களுக்கு பரிமாறி பாராட்டுகளை பெற்றார். இந்த மாதிரியான பாரம்பரியான அரிசி வகைகளின் நன்மைகளை அறியாத காரணத்தால் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுகிறோம். இலுப்பை பூ சம்பா அரிசியை வடித்து சாப்பிட்டால் மட்டுமே முழு நன்மைகளை பெற முடியும். இதை அன்றாட உணவுமுறையில் வடித்து சாப்பிடும் போது நோய் பாதிப்புகளை தடுக்க முடியும். இலுப்பை பூ சம்பா அரிசி வடிப்பது எப்படி ? அதன் ஊட்டச்சத்துகள், நன்மைகளை பார்ப்போம். இது மருத்துவரின் தகவல் பெறப்பட்டு எழுதப்பட்டுள்ளது.
இலுப்பை பூ சம்பா அரிசியை இரண்டு முறை தண்ணீரில் கழுவவும். முதல் முறை கழுவும் போது உமி மேலே வந்துவிடும். ஒரு கப் அரிசிக்கு ஐந்து கப் தண்ணீர் என்ற அளவில் எடுத்து ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். ஊறவைத்த தண்ணீரை சமையலுக்கும் பயன்படுத்தலாம். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் அரிசியை போடுங்கள். 15 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடவும். அதன் பிறகு அடுப்பை ஆஃப் செய்துவிட்டு 15 நிமிடங்களுக்கு அப்படியே விடுங்கள். அடுத்ததாக தண்ணீரை வடித்து சாப்பிடலாம்.
மேலும் படிங்க மாம்பழ கொட்டையை பவுடராக்கி உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும்; எல்லா பிரச்னைக்கும் ஓரே தீர்வு
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]