Ghee Milk at Night : இரவு பாலில் நெய் கலந்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

நெய் மற்றும் பால் கலவையானது ஆரோக்கியத்திற்கு பல அற்புத நன்மைகளை கொடுக்கும். இரவில் பாலில் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகளை நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்…

drinking ghee milk at night daily

நம் வீடுகளில் எப்போதும் இருக்கக்கூடிய உணவு பொருட்களின் பால் மற்றும் நெய்யும் அடங்கும். பால் மற்றும் நெய்யின் தனித்துவமான ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். இன்றைய பதிவில் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் நெய் கலந்த பாலை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை ஊட்டச்சத்து நிபுணரான மாயா பெரோரா அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

பாலில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்

நிபுணரின் கருத்துப்படி பாலில் உள்ள டிரிப்டோபான் எனும் அமினோ அமலம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. இந்த டிரிப்டோபான் மாற்றப்படும்போது மனதை மகிழ்ச்சியடையச் செய்யும் ஹார்மோனான செரோடோனின் உற்பத்தி செய்யப்படுகிறது. செரோடோனின் நல்ல தூக்கத்தை பெற உதவும் ஹார்மோனான மெலடோனின் அளவை அதிகரிக்கிறது.

மேலும், நிபுணர் கூறியதாவது பாலில் காணப்படும் மெலடோனின் எனும் ஹார்மோன், தூக்கம் மற்றும் விழித்திருக்கும் சுழற்சிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பாலில் காணப்படும் சில புரதங்கள் கவலை மற்றும் பதட்டத்தைக் குறைக்கவும், நல்ல தூக்கத்தை பெறவும் உதவுகின்றன.

நெய்யில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்

ghee milk

ஆயுர்வேத சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் சுத்தமான நெய்யில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. நெய் மூட்டு விறைப்புத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. நெய்யில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருமலை குணப்படுத்த உதவுகின்றன மற்றும் ஃப்ரீ ரேடிகல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலை பாதுகாக்கின்றன.

ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமான நெய்யில் வைட்டமின்கள் A, D, E மற்றும் K ஒன்று பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

பாலில் நெய் கலந்து குடிப்பதால் செரிமானம் மேம்படும், ஊட்டச்சத்துக்களின் உறிஞ்சுதல் சிறப்பாக இருக்கும் மற்றும் தூக்கம் விழிப்பு சுழற்சி சீராக நடைபெறும். இதனுடன் நல்ல பளபளப்பான சருமத்தையும் பெறலாம்.

பாலில் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

ghee milk at night

  • இரவு தூங்கச் செல்வதற்கு முன் பாலில் நெய் கலந்து குடிப்பது செரிமான சாறுகளின் உற்பத்திக்கு உதவுகிறது. இதை குடித்து வர வயிற்று பொருமல், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளையும் தடுக்கலாம்.
  • இது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலம் உங்களை ஆற்றலுடன் செயல்பட அனுமதிக்கிறது.
  • பால் மற்றும் நெய் கலவையானது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
  • இரவு தூங்கச் செல்வதற்கு முன் பாலில் நெய் கலந்து குடித்து வந்தால் எலும்புகள் வலுப்பெறும். இது மூட்டு வலிக்கும் நல்ல நிவாரணம் கொடுக்கும்.
  • இரவு தூக்கம் வராமல் சிரமப்படுகிறீர்களா? படுத்தவுடனே நல்ல தூக்கம் வர இரவில் நெய் கலந்த பால் குடிக்கலாம்.
  • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இரவில் பாலுடன் நெய் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.
  • இது தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மிகவும் நல்லது.

பால் மற்றும் நெய், இவ்விரண்டும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் உங்களுடைய உணவு முறையில் இந்த கலவையை சேர்த்துக் கொள்வதற்கு முன் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை பெறவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான 5 அற்புத உணவுகள்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP