herzindagi
image

பலவித சேதங்களை சந்தித்து மோசமாக இருக்கும் கூந்தலை இந்த ஷாம்பூவை கொண்டு குணப்படுத்தலாம்

முடி சேதமடைந்து பார்க்கவே மோசமான நிலையில் இருக்கிறதா? கூந்தல் சார்ந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும் இந்த ஷாம்பூ. இந்த ஷாம்பூவை எளிதாக வீட்டிலேயே செய்யலாம்
Editorial
Updated:- 2024-09-18, 18:27 IST

ஒவ்வொரு பெண்ணும் தன் தலைமுடி அடர்த்தியாகவும், நீளமாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். ஆனால் மாறிவரும் வானிலை, வாழ்க்கை முறை, உணவு போன்ற பிரச்சனைகளால் பலவீனமாகிறது. இந்த எல்லா காரணங்களால் முடி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்து, பின் சேதமடைகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், சேதமடைந்த முடியை எளிதில் சரிசெய்யப்பட வேண்டும் என்று விரும்பினால்,  வீட்டில் தயாரிக்கப்படும் இந்த ஷாம்பூவைப் பயன்படுத்தலாம். வீட்டில் ஷாம்பு செய்வது எப்படி என்று அழகு நிபுணர் ரேணு மகேஸ்வரியிடம் பேசினோம். நிபுணர் கூறிய இந்த வழிகளில் சரிசெய்யலாம்.

 

மேலும் படிக்க: சோள மாவை முகத்தில் இப்படி தடவினால்.. ஒரு துளி அழுக்கை கூட சருமத்தில் பார்க்க முடியாது

இந்த ஷாம்பூவில் சேர்க்கப்படும் அனைத்து பொருள்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை, இவை அனைத்தும் கூந்தலுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த விஷயங்களின் உதவியுடன், சேதமடைந்த முடி சரிசெய்யப்படும் அதே வேளையில், முடி அழகாகவும் பளபளப்பாகவும் மாறும்.

 

தேவையான பொருள்கள்

 

  • 4 முதல் 5 பூந்திக்கொட்டை
  • 1 அலோ வேரா தண்டு
  • 2 முதல் 4 செம்பருத்தி மலர்கள்

 

ஷாம்பூ பயன்படுத்தும் முறைகள்

 soapnuts

  • இவை அனைத்தையும் தண்ணீரில் 2 மணி நேரத்திற்கு முன் ஊற வைக்கவும்.
  • அதன் பிறகு தண்ணீருடன் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த தண்ணீரை தலைமுடியில் தடவவும்.
  • சிறிது நேரம் கழித்து தலைமுடியை சுத்தமான தண்ணீரில் கழுவவும்.
  • இந்த பூந்திக்கொட்டை ஷாம்பூவை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யவும்.


நெல்லிக்காய் கொண்டு அருமையாக ஷாம்பூ செய்யலாம்

 

தேவையான பொருள்கள்

 

amla

 

  • 4 முதல் 5 பூந்துக்கொட்டை எடுத்துக்கொள்ளவும்
  • 4 முதல் 5 ஷிகாகாய்
  • 4 முதல் 5 நெல்லிக்காய்

 

பயன்படுத்தும் முறைகள்

 

  • இவை அனைத்தையும் இரவில் தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளவும்.
  • அதன்பிறகு அதே தண்ணீரில் அதை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • தலைமுடியை மசாஜ் செய்து இந்த ஷாம்பூவை தலைமுடியில் தடவேண்டும்.
  • 10 நிமிடம் கழித்து சாதாரண நீரில் தலையை அலசவும்.
  • இந்த பரிகாரத்தை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யவும்.

 

இந்த விஷயங்களை மனதில் வையுங்கள்

 

  • தலைமுடி ஆரோக்கியமாக வைத்திருக்க வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தடவ வேண்டும்.
  • எண்ணெய் தடவிய பின் முடியை நன்றாக கழுவவும்.
  • சரியான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தவும்.
  • வாரத்தில் 2 நாட்கள் ஹேர் பேக் பயன்படுத்தவும்.

 

மேலும் படிக்க: கரும்புள்ளிகள் இனி உங்கள் முகத்தில் பார்க்கவே கூடாது என்றால் இந்த சர்க்கரை ஸ்க்ரப் பயன்படுத்தவும்

 

குறிப்பு- மேற்கூறிய வைத்தியத்தை பின்பற்றுவதற்கு முன், நீங்கள் பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் முடி அமைப்பும் வித்தியாசமானது, மேலே குறிப்பிட்டுள்ள வைத்தியம் உங்களுக்கு உடனடி பலன்களைத் தரும் என்று நாங்கள் கூறவில்லை. நீங்கள் ஒருமுறை உங்கள் நிபுணரிடம் ஆலோசித்து, பின்னர் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]