பிக்பாஸ் தமிழ் : முதல் வார எவிக்‌ஷனில் 6 போட்டியாளர்கள்; ஜாக்குலின் டூ ரஞ்சித்

பிக்பாஸ் தமிழ் 8 சீசனில் முதல் வார எவிக்‌ஷனுக்கு 6 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். விஜய் டிவி ஜாக்குலின், அருண் பிரசாத், ஃபேட் மேன் ரவீந்தர், நடிகர் ரஞ்சித், முத்துக்குமரன், செளந்தர்யா நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
image

பிக்பாஸ் தமிழ் 8 சீசன் தொடங்கிய முதல் நாளிலேயே சூடு பிடித்துள்ளது. யாரும் எதிர்பாராதவிதமாக 24 மணி நேரத்திற்குள் பிக்பாஸ் எவிக்‌ஷனை அறிவித்து போட்டியாளர்கள் முடிவெடுத்து ஒருவரை வெளியேற்ற வேண்டும் என தெரிவித்தார். அதன்படி மகாராஜா புகழ் விஜய் சேதுபதியின் செல்லப்பிள்ளை சாச்சனா வெளியேற்றபட்டார். அழுதுகொண்டே வீட்டை விட்டு மிகுந்த வருத்தத்துடன் வெளியேறினார். சரி இந்த வார எவிக்‌ஷன் முடிந்துவிட்டது என போட்டியாளர்கள் நினைத்த நிலையில் பிக்பாஸ் மீண்டும் ட்விஸ்ட் வைத்து லிவிங் ஏரியாவில் முதல்வார நாமினேஷனை அறிவித்தார். இதில் அதிக வாக்குகளை பெற்று விஜய் டிவி ஜாக்குலின், அருண் பிரசாத், ஃபேட் மேன் ரவீந்தர், நடிகர் ரஞ்சித், முத்துக்குமரன், செளந்தர்யா முதல் வார எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டனர்.

யார் யாரை நாமினேட் ?

சாச்சனா வெளியேற்றப்பட்ட நிலையில் 17 போட்டியாளர்களை மாறி மாறி நாமினேட் செய்தனர்

  • தர்ஷிகா - ஜாக்குலின், ரஞ்சித்
  • தீபக் - ஜாக்குலின், அன்ஷிதா
  • முத்துக்குமரன் - ரஞ்சித், அருண் பிரசாத்
  • செளந்தர்யா - அருண் பிரசாத், அர்னவ்
  • ஆர்.ஜே ஆனந்தி - தீபக், அருண் பிரசாத்
  • சத்யா - ஃபேட் மேன், முத்துக்குமரன்
  • ஜாக்குலின் - விஜே விஷால், சுனிதா
  • ஜெஃப்ரி - செளந்தர்யா, ஃபேட் மேன்
  • தர்ஷா குப்தா - செளந்தர்யா, அர்னவ்
  • அருண் பிரசாத் - ஃபேட் மேன், செளந்தர்யா
  • ஃபேட் மேன் - அன்ஷிதா, ஜெஃப்ரி
  • பவித்ரா - ரஞ்சித், ஜாக்குலின்
  • விஜே விஷால் - ஜாக்குலின், முத்துக்குமரன்
  • சுனிதா - ஜாக்குலின், ரஞ்சித்
  • அர்னவ் - ஃபேட் மேன், தீபக்
  • ரஞ்சித் - ஃபேட் மேன், முத்துக்குமரன்

நாமினேஷன் முடிந்த பிறகு தர்ஷா குப்தா நடிகர் ரஞ்சித்திடம் சென்று நீங்க பிடிச்ச மாதிரி பேசிட்டு பூசி முழுகி பேசிட்டு கடைசியா நாமினேட் செஞ்சீங்க. அதை நேரடியாகவே சொல்லி இருக்கலாம் என்றார். இதற்கு ரஞ்சித் நான் நீளமா சொல்லுவேங்க; சிலர் கைல பல் தேய்பாங்க நான் பிரஷ்ல் தேய்ப்பேன் என்று மழுப்பிவிட்டு சென்றார்.

தலைவனா ? தலைவியா

பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனை தேர்வு செய்ய 8 பெண்களுக்கும், 9 ஆண்களுக்கும் இடையே போட்டி நடந்தது. இதில் விதிகள் புரியாமல் பெண்கள் அணி சொதப்பியது. தர்ஷிகாவும் தீபக்கும் கேப்டன் பதவிக்கு மோதினர். ஆர்.ஜே ஆனந்திக்கும், அன்ஷிதாவுக்கும் விதிகள் சரியாக புரியவில்லை. எனினும் தர்ஷிகா போட்டியில் வென்று கேப்டனாக தேர்வானார். இதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என தீபக் கூறினார். சில நிமிடங்கள் கழித்து சீரியல் நடிகர் அருண் பிரசாத் இது கேப்டன்ஸிக்கான போட்டியா என கேட்டார். இதற்கு விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதை ராமன் சித்தப்பன் என்பது போல் நீ பேசுற என தீபக் கிண்டலடித்தார்.
பிக்பாஸ் அப்டேட்களுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP