ஒவ்வொரு மாதமும் சஷ்டி என்ற திதி வருகிறது. சஷ்டியில் விரதம் கடைபிடித்து முருகப்பெருமானை வழிபாடு செய்வதை நம்மில் பலர் வழக்கமாக வைத்திருக்கிறோம். இதில் ஐப்பசி மாதம் வரும் சஷ்டிக்கு மகா சஷ்டி எனப் பெயர். இதை நாம் கந்த சஷ்டி என்று குறிப்பிடுகிறோம். தீபாவளி பண்டிகைக்கு பிறகு வரக்கூடிய சஷ்டி திருநாளை எதிர்நோக்கி ஏராளமானோர் காத்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விரதம் இந்த கந்த சஷ்டி. மகா சஷ்டி விரதம் கடைபிடிப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், கல்யாண வரன் அமையும், உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோய் குணமாகும், படிப்பு, வேலை என எந்த பிரச்னையாக இருந்தாலும் முருகப்பெருமான் தீர்த்து வைப்பார். நம்பிக்கையோடு விரதம் கடைபிடிப்பவர்கள் யாராக இருந்தாலும் அப்பன் முருகன் நிச்சயம் பலன் தருவார்.
கந்த சஷ்டி விரத நாள் : நவம்பர் 2ஆம் தேதி தொடக்கம்
ஒவ்வொரு முருக பக்தரும் தங்களுடைய உடல்நிலைக்கு ஏற்ப விரதம் கடைபிடிப்பது நல்லது.
விரத நாட்களில் காலை நேரத்தில் எக்காரணம் கொண்டும் தூங்க கூடாது.
மேலும் படிங்க தீபாவளிக்கு இந்த பொருட்களை வாங்கினால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும், வளம் பெருகும்
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]