
கந்த சஷ்டி விரதம் 2024
ஒவ்வொரு முருக பக்தரும் தங்களுடைய உடல்நிலைக்கு ஏற்ப விரதம் கடைபிடிப்பது நல்லது.
- ஒரு வேளை உணவு சாப்பிட்டு இரண்டு வேளை பட்டினியாக இருக்கலாம்
- இரண்டு வேளை பட்டினியாக இருந்து ஒரு வேளை சாப்பிடலாம்
- மூன்று வேளையும் விரதம் கடைபிடித்தால் நெய் வேத்தியம் செய்த பால் மற்றும் வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சாப்பிடலாம்.
- சிலர் இளநீர் மட்டுமே குடித்து விரதம் கடைபிடிப்பார்கள். இளநீரின் வழுக்கையை சாப்பிடுவது தவறல்ல.
- 7 விரத நாட்களிலும் மிளகு மட்டுமே சாப்பிடுவது கடுமையான விரதமாகும். முதல் நாளில் ஒரு மிளகு, அடுத்த நாளில் இரட்டிப்பு செய்து இரண்டு மிளகு என அடுத்தடுத்த நாட்களில் இரட்டிப்பு செய்து 7 நாட்களுக்கும் மிளகு மட்டுமே எடுப்பார்கள்.
- சிலர் உப்பு இல்லாத உணவாக தயிர் சாதம் மற்றும் பால் சாதம் மட்டுமே உட்கொள்வார்கள்.
- இன்னும் ஒரு சிலர் காய்கறிகள் மட்டுமே சாப்பிட்டு அரிசி, பருப்பு தவிர்த்து விரதம் கடைபிடிப்பார்கள்.
- விரதத்தின் ஏழு நாட்களிலும் தண்ணீர் குடிக்கலாம். இதில் தவறு கிடையாது.
விரத காலத்தில் செய்யக் கூடாதவை
விரத நாட்களில் காலை நேரத்தில் எக்காரணம் கொண்டும் தூங்க கூடாது.
விரதம் தொடங்குவது எப்படி?
- நவம்பர் 2ஆம் தேதி காலை சூரிய உதயத்திற்கு முன்பாக முருகப் பெருமானுக்கு பூஜை செய்து காப்பு கட்டி விரதத்தை தொடங்கவும்.
- விரதத்தின் 7 நாட்களுக்கும் முருகப் பெருமானுக்கு பூஜை செய்யுங்கள்.
- விரதத்தின் முதல் நாளில் அதிகாலை 4 மணிக்கு எழுந்து முருகப் பெருமானுக்கு பூஜை
- பெரியவர்களிடம் ஆசி வாங்கி விரதம் தொடங்கவும்.
- மஞ்சள் நூலை கைகளில் காப்பாக கட்டுங்கள்.
- முருகப்பெருமானுக்கு நெய் வேத்தியமாக காய்ச்சிய பால், தேன், வெற்றிலை வைத்து வழிபடவும்.
- விரதம் கடைபிடிப்பதை அனைவரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. முடிந்தவரை பேச்சை குறைத்து 7 நாட்களுக்கும் உடலில் ஆற்றலை தக்க வைக்கவும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation