ஆந்திரா மெஸ் சென்று மீல்ஸ் ஆர்டர் செய்தால் வாழை இலை போட்டு கூட்டு, ஊறுகாய், வடகம், கலர் அப்பளம் வைத்த பிறகு சுட சுட சாதம் வைப்பார்கள். வழக்கம் போல் சாம்பாரில் இருந்து தொடங்க நினைத்தால் பருப்பு பொடி தருவார்கள். தமிழகத்தில் உள்ள எந்த உணவகத்திலும் சாம்பார், குழம்பு தான் முதலில் வைப்பார்கள். ஆந்திரா மெஸ் மட்டுமல்ல ஆந்திராவில் எங்கு சென்றாலும் சூடான சாதத்தில் பருப்பு பொடி போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடுவதை பார்க்க முடியும். இது தோசை, இட்லிக்கு தொட்டு சாப்பிடும் பொடியல்ல. இதன் ருசி அவ்வளவு அருமையாக இருக்கும். பொடியுடன் சாதம் சாப்பிடுவதா என நினைக்காதீர்கள். ஒரு முறை இந்த பருப்பு பொடியை சாப்பிட்டு பாருங்கள். ஆந்திரா மீல்ஸ் பக்கம் அடிக்கடி செல்வீர்கள். ஆந்திராவில் இதற்கு கண்டி பொடி, கன் பவுடர் என பெயர்கள் உண்டு. இதன் செய்முறைக்கு பத்துக்கும் குறைவான பொருட்கள் போதும்.
குறிப்பு : தரமான பருப்பு வகைகள் மற்றும் இரும்பு கடாய் அல்லது பேன் பயன்படுத்தவும்
Herzindagi video
ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடியை வீட்டிலேயே ருசிப்பதற்கான ரெசிபி
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]