தனிமையாக உணர்கிறீர்களா ? தவிர்ப்பதற்கு இந்த விஷயங்களை பின்பற்றுங்க

தனிமையாக உணர்வது பலரும் வாழ்க்கையில் எதிர்கொள்ள கூடிய ஒன்று தான். ஆனால் அதீத தனிமை சில நேரங்களில் சிக்கல்களை உண்டாகும். அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் இங்கே...

loneliness

பல நேரங்களில் நம்மை சுற்றி நிறைய பேர் இருந்தாலும் தனிமையாகவே உணருவோம். ஏன் தனிமையாக உணர்கிறோம் என்ற காரணமே புரியாது. நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என உள்ளுக்குள் புலம்புவோம். நம்மை சுற்றி சிலர் இருக்கின்றனர் என நினைத்து கொண்டு தனியாக பேசி கொண்டு இருப்போம். இதற்கு எப்படி தீர்வு காண்பது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

how to overcome loneliness

சிலருக்கு இயல்பாகவே யாருடனும் நெருங்கி பழகும் எண்ணம் இருக்காது. அவர்களை ஏதும் செய்ய இயலாது. திடீரென ஒரு பிரச்சினை ஏற்பட்டு அதன் பிறகு தனிமையாக உணர்ந்தால் கீழ்காணும் ஏழு விஷயங்களை படிப்படியாக முயற்சிக்கவும்.

நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள்

உயிர் கொடுப்பான் தோழன் என்ற வாசகத்தை தனியாக இருக்கும் போது நினைவில் கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கு ஒரு நண்பராவது இருக்க வாய்ப்புண்டு. அவரை நேரில் சந்திக்க முயற்சி செய்யுங்கள் அல்லது தொலைபேசியில் அழைத்து நீங்கள் எதிர்கொள்ளும் தனிமையை பற்றி விவரியுங்கள்.

பொழுதுபோக்கில் கவனம்

உங்களுக்கு ஆர்வமுள்ள விஷயங்களில் கவனம் செலுத்தி நேரத்தை பயனுள்ளதாக மாற்றிடுங்கள். புத்தக வாசிப்பு, ஓவியம் வரைதல் போன்றவை பயனுள்ளதாக அமையும்.

தொண்டு செய்வது

சமூகத்தில் உங்களது பங்களிப்பை உறுதிப்படுத்தை தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வார விடுமுறைகளில் பணி செய்யுங்கள். வீட்டின் அருகே உள்ள குளங்களை சுத்தம் செய்வது, விழிப்புணர்வு பேரணிகளில் பங்கேற்பது போன்றவை ஆக்கப்பூர்வமான விஷயங்களாகும்.

புதிய நட்பு வட்டாரம்

சமூக வலைதளங்களை பயன்படுத்தும் நபராக இருந்தால் உங்களுக்கான குழுக்களை கண்டறியவும். உதாரணமாக உங்களுக்கு மலையேற்றம் பிடிக்கும் என்றால் அதற்கென உள்ள குழுவில் இணைந்து அவர்கள் திட்டமிடும் பயணங்களுக்கு நீங்களும் சென்று புதிய நட்பு வட்டாரத்தை உருவாக்குங்கள்.

உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்வது உங்களது மனநிலையை மேம்படுத்தும். நடைபயிற்சி, யோகா அல்லது நடனம் எதுவாக இருந்தாலும் உடல் செயல்பாடுகளை அதிகப்படுத்துவது தனிமையை எதிர்த்து போராட உதவும்.

சுய பாதுகாப்பு பயிற்சி

உங்கள் மீது அக்கறை கொள்ளுங்கள். உடல்நலன், ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். இதனால் உங்களது ஒட்டுமொத்த நல்வாழ்வும் மேம்படும்.

உளவியல் நிபுணரை அணுகவும்

மேற்கண்ட விஷயங்களை பின்பற்றிய பிறகும் நீங்கள் தனிமையாக உணர்ந்தால் கட்டாயமாக உளவியல் நிபுணரை அணுகி உங்கள் பிரச்சனையை கூறவும். அவர் சொல்லும் வழிகாட்டுதலை பின்பற்றி தனிமையில் இருந்து மீள முயற்சி செய்யுங்கள்.

குறிப்பு

தனிமையாக இருப்பது என்பது ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்ளும் விஷயம் தான். இதை ஒரு அனுபவமாக கருதி நேர்மறையாக சிந்தித்து தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP