திரிபலாவின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவீர்களா நீங்கள்?

உடல் நலம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு வேண்டுமென்றால், நீங்கள் திரிபலா பயன்படுத்தலாம். 

triphala uses

திரிபலா என்பது மூன்று மூலிகைகளால் ஆனது கடுக்காய், தான்றிக்காய்,நெல்லிக்காய். இது நாள்பட்ட மலச்சிக்கலைத் தீர்க்கும் மிகச் சிறந்த மருந்து. மேலும் இது கண் நோய், தோல் நோய், வாய் சம்பந்தப்பட்ட நோய் மற்றும் அதிகப்படியான அசிடிட்டியை சரி செய்யக் கூடியது.

ஆயுர்வேத டாக்டர் வரலக்ஷ்மி அவர்கள் தனது இன்ஸ்டாகிராமில் இதனை பகிர்ந்துள்ளார் அவர் கூறியதாவது, திரிபலா என்பது நம் அனைத்து நோய்களையும் குணமாக்கும் ஒரு சிறந்த மூலிகை. நோய்களைத் தீர்க்க பயன்படுத்தும் போது பல விதமான அதிசயங்களை நிகழ்த்துகிறது. நமது ஆரோக்கியத்துக்கு திரிபலா எந்த வகையில் நன்மை செய்கிறதென்று கட்டுரையின் வாயிலாக விரிவாகக் காணலாம்.

1. காயங்களை விரைவில் ஆற்றும்

triphala Inside

உடலின் வெளிப் புறத்தில் ஏற்படக்கூடிய காயங்களை ஆற்றும் பணியை அருமையாகச் செய்கிறது. இது அழற்சி எதிர்ப்புச் சக்தியை கொண்டு உள்ளதால் ஆற்றவே முடியாத சர்க்கரை வியாதி உள்ளவர்களின் காயங்களைக் கூட ஆற்றி விடும். தொற்று நோயை எதிர்த்துப் போராடி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

2. கண் பார்வையை மேன்மையடையச் செய்கிறது

திரிபலா கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் சரி செய்து கண்களை ஆரோக்கியமாக வைக்கிறது. கண்களை திரிபலா கொண்டு கழுவினால் அது கண் வறட்சியைப் போக்கி கண் பிரச்சினையையும் குறைக்கும், கண்களில் தேங்கும் அழுக்குகளையும் நீக்குகிறது. கண்களைச் சுத்தப்படுத்தும் வேலையைச் சிறப்பாகச் செய்கிறது. இது கண்களில் ஏற்படும் புண், கண்ணிலும் கண் இமைகளிலும் கண் தொற்றால் ஏற்படும் சீழ் வடிதலையும் குணப்படுத்துகிறது.

3. தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

triphala inside

ஷாம்பு போடுவதற்கு முன் திரிபலா பயன்படுத்தி முடியை அலசினால் பொடுகு மறைந்து விடும். திரிபலாவில் இருக்கும் கலவை பொருட்கள் பிளவு பட்ட முடியைச் சரிசெய்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். இதில் உள்ள முக்கிய பொருட்களான கடுக்காய் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்புச் சக்தி கொண்டது. இது மயிர்க் கால்களில் செயல்பட்டு அனைத்து விதமான பூஞ்சை தொற்றுக்களையும் இல்லாமல் செய்து விடும்.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் முடி வறண்டு காணப்படுகிறதா? இதோ வீட்டு வைத்தியம்!!!

4. துர்நாற்றத்தைப் போக்கும்

திரிபலா வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாவை மட்டும் நீக்காமல் வாய் வழியாக உள் உறுப்புக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. திரிபலா பூஞ்சைகள் வளர்ச்சியைக் குறைத்து நம் வாயில் உருவாகக்கூடிய கேண்டிடா எனும் ஒரு வகை பூஞ்சை காளானைத் தடுக்கிறது மற்றும் வாயில் உண்டாகும் புண்களை ஆற்றுகிறது.

5. மூல நோய் சிகிச்சை

triphala inside

மூல நோயால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்றால் வெதுவெதுப்பான திரிபலா நீரில் உட்காரலாம். இது நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து, ஆசன வாயில் மற்றும் சிறுநீர்ப் பைகளில் உள்ள இரத்த குழாய்களை நெகிழ வைக்கிறது மற்றும் ஆசன வாய் பகுதியில் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. திரிபலா ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு கொண்ட ஒரு இயற்கை மலமிளக்கியாகச் செயல்பட்டு மலத்தை எளிதில் வெளியேற்றுகிறது

திரிபலா கஷாயம் எப்படிச் செய்வது?

  • 200 மில்லி தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்
  • அதில் 1/8 ஸ்பூன் திரிபலா பொடியைச் சேர்க்கவும்.
  • நன்றாகக் கொதிக்க விட்டு, 50 மில்லியாக வற்ற விட வேண்டும்.
  • இது விரைவில் கெட்டுப் போகும் தன்மை கொண்டது என்பதால் ஒரு நாளுக்கு மேல் வைத்துக் கொள்ள வேண்டாம்.
  • தேவைப்படும் போது புதிதாகத் தயார் செய்து கொள்ளலாம்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP