தலைமுடியை சீவுவதற்கு சீப்பு பயன்படுத்துகிறோம். 20-30 ஆண்டுகளுக்கு முன்பாக மரத்தில் ஆன சீப்பு பயன்பாட்டில் இருந்தது. இப்போதெல்லாம் பிளாஸ்டிக் சீப்பை மட்டுமே பயன்படுத்துகிறோம். சீப்பு வாங்கிய கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே பளபளக்கும். அதன் பிறகு அழுக்கு, பொடுகு, எண்ணெய், கிருமிகள் தேங்கி கருப்பாக காட்சியளிக்கும். இவை அனைத்திலும் தலைமுடியில் இருந்து சீப்பிற்கு பரிமாற்றம் ஆனவை. தலையில் தேய்த்த எண்ணெய், உடைந்த முடி, அழுக்கு, தலைமுடிக்கு பயன்படுத்திய பொருட்கள் சீப்பை அழுக்காக மாற்றிடும். சீப்பை இரண்டு வாரங்களுக்கு ஒரு சுத்தம் செய்யாவிட்டால் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும். தலைமுடியை பாதுகாக்க நாம் பல முயற்சிகள் எடுக்கிறோம். ஆனால் சீப்பை சுத்தம் செய்ய தவறிவிட்டால் தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாக்க இயலாது. சீப்பு அழுக்கானால் குப்பையில் வீச தேவையில்லை. மர சீப்பு, பிளாஸ்டிக் சீப்பு எதுவாக இருந்தாலும் 5 ரூபாயில் திரவம் தயாரித்து அவற்றை சுத்தம் செய்யலாம்.
சீப்பை சுத்தம் செய்வதற்கு சமையலறையில் உள்ள சில பொருட்கள் போதுமானது. வினிகர், பேக்கிங் சோடா கொண்டு சீப்பு சுத்தம் செய்யும் திரவம் தயாரிக்க போகிறோம்.
இதற்கு சிறிய பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் உப்பு போட்டு அதில் ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டி பிழியவும்.
இதை கலந்துவிட்டு எலுமிச்சை தோலில் தொட்டு எடுத்து சீப்பின் பற்களில் தேய்க்கவும். அழுக்கை எளிதில் அகற்றிவிடலாம்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]