herzindagi
image

3 வராங்களில் முடி உதிர்தல் பிரச்சனைகளை நிறந்தரமாக நிறுத்த இந்த ஆயுர்வேத குறிப்புகளை பின்பற்றுங்கள்

முடி உதிர்தலுக்கு சிறந்த வைத்தியங்களைத் தேடுகிறீர்களானால், நிச்சயமாக இந்தக் கட்டுரையை ஒரு முறை படியுங்கள். 3 வராங்களில் முடி உதிர்தால் தொடர்பான அனைத்து சிக்கள்களையும் தீர்க்க உதவும்.
Editorial
Updated:- 2025-08-23, 15:28 IST

ஒவ்வொரு முறையும் உங்கள் தலைமுடியை சீவும்போது அது உங்கள் தலையில் இருந்து கொத்து கொத்தாய் முடி உதிர்கிறதா? நீங்கள் இதற்காக கவலைப்பட்ட வேண்டாம். ஒவ்வொருவருக்கும் தினமும் ஓரளவு முடி உதிர்தல் ஏற்படுகிறது. ஆனால் எந்த அளவுக்கு முடி உதிர்வு ஏற்படுகிறது என்பதுதான் கேள்வி. ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முடி இழைகள் உதிர்வது இயல்பானது. ஆனால், உங்கள் முடி அதை விட அதிகமாக உதிர்ந்தால்தான் பிரச்சனை. அல்லது, ஏதேனும் சேதத்தால் முடி வளர்ச்சி இல்லாதபோதுதான் பிரச்சனை.

இன்று உங்கள் பிரச்சனையை மிக விரைவாக தீர்க்கக்கூடிய 3 ஆயுர்வேத விஷயங்களைப் பற்றி பார்க்கலாம். உடலில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு, சரியான தூக்கமின்மை, ஆட்டோ இம்யூன் நோய்கள், தைராய்டு, மன அழுத்தம், சில நோய்க்குப் பிறகு மற்றும் மோசமான ஊட்டச்சத்து ஆகியவை அதிக முடி உதிர்தலை ஏற்படுத்துகின்றன. அவற்றை சரிசெய்யும் வழிகளை பார்க்கலாம்.

 

மேலும் படிக்க: இயற்கையான முறையில் ஆமணக்கு எண்ணெய், கற்றாழை பயன்படுத்தி கூந்தலை வலிமையாக வைத்திருக்க சிறந்த வைத்தியம்

 

நாஸ்யா செய்யலாம்

 

தூங்குவதற்கு முன் அல்லது காலையில் மூக்கில் 2 சொட்டு பசு நெய்யை வைப்பது முடி உதிர்தலை நிறுத்துகிறது. இது தவிர, இது நரை முடிக்கு அதிசயங்களைச் செய்கிறது, முடி வளர்ச்சி, நினைவாற்றல், செறிவு, தூக்கம், அறிவாற்றல் மற்றும் பலவற்றை மேம்படுத்துகிறது. தலைவலி போன்ற பிற பிரச்சினைகளுக்கு இந்த வைத்தியம் தீர்க்க உதவுகிறது, ஆனால் ஒரு ஆயுர்வேத மருத்துவரை அணுகிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

ghee 1 spone

 

தலைமுடியை தொடர்ந்து ஊட்டமளிக்க வேண்டும்

 

நாம் உணவின் மூலம் பெரும்பாலான ஊட்டச்சத்தைப் பெறுகிறோம், ஆனால் அதைத் தவிர, நமது தலைமுடிக்கு உச்சந்தலையில் இருந்து நேரடி ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. தேங்காய் எண்ணெய், பிரிங்கராஜ், வேம்பு, செம்பருத்தி ஆகியவற்றைக் கொண்ட முடி எண்ணெயைப் பயன்படுத்துவது மன அழுத்தம், மோசமான தூக்கம், தைராய்டு அல்லது வேறு ஏதேனும் நோய் காரணமாக ஏற்படும் முடி உதிர்தலுக்கு அதிசயங்களைச் செய்கிறது. முடி எண்ணெய் அதிகப்படியான முடி உதிர்தலை ஏற்படுத்துவதாக நீங்கள் உணர்ந்தால், செம்பருத்தி, வேம்பு, பிரிங்கராஜ் போன்ற கேஷு மூலிகைகள் கொண்ட முடி முகமூடிகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறேன்.

முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தும் தேநீர்

 

இந்த தேநீரை பருகுவது பித்தம் மற்றும் வாதத்தைக் குறைத்து உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கிறது.

scalp pimples 2

 

தேவையான பொருட்கள்

 

  • கறிவேப்பிலை - 7-10
  • தண்ணீர் - 1 கிளாஸ்
  • செம்பருத்தி பூ - 1

 

செய்முறை

 

  • கறிவேப்பிலையை எடுத்து 300 மில்லி தண்ணீரில் 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  • பின்னர் 1 செம்பருத்தி பூவை தண்ணீரில் சேர்க்கவும்.
  • இதை 3 நிமிடங்கள் இப்படியே விடவும்.
  • பின்னர் இந்த சூப்பர் குளிர்ச்சியூட்டும் மற்றும் கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் தேநீரை வடிகட்டி குடிக்கவும்.
  • இப்போது இந்த தேநீர் குடிக்க தயார்.

 

மேலும் படிக்க: தளர்வான சருமத்தை குறுகிய நாட்களில் இறுக்கமாக்க வெள்ளரிக்காயுடன் கலந்த ஓட்ஸ் ஃபேஸ் பேக்

 

தேநீர் அருந்தும் நேரம்

 

  • காலை
  • மாலை
  • படுக்கைக்குச் செல்லும் போது

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]