herzindagi
image

மழைக்காலத்தில் ஏற்படும் தலைமுடி உதிர்வைத் தடுக்கும் சிம்பிள் டிப்ஸ்கள்!

மழைக்காலங்களில் அதிக ஈரப்பதம் நிறைந்த வானிலை சூழல் காரணமாக சருமம் மட்டுமல்ல பெண்களின் கூந்தலும் வலுவிழக்கும். இவற்றை சரி செய்ய வீட்டிலேயே எளிய முறைகளை மேற்கொள்ளலாம்.  
Editorial
Updated:- 2025-09-22, 15:55 IST

மழைக்காலம் வந்தாலே மனதிற்கு இதமான சூழல் அமைந்தாலும், வானிலை மாற்றம் காரணமாக சளி,இருமல், காய்ச்சல் போன்ற பல்வேறு பாதிப்புகளும் ஏற்படும். அதிலும் மழையில் நனையும் போது ஏற்படக்கூடிய ஈரப்பதம் தலைமுடி வளர்ச்சியைக் குறைப்பதோடு, அழுக்குகள் அதிகளவில் தேங்கி தலைமுடி உதிர்விற்கும் வழிவகுக்கும். ஈரப்பதமான சூழல் நீண்ட நேரம் நீடிக்கும் போது கூந்தலில் ஒரு வித துர்நாற்றமும் ஏற்படக்கூடும். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் மழைக்காலங்களில் கூந்தலை முறையாகப் பராமரிக்க வேண்டும். இதற்காக விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்கள் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.

மேலும் படிக்க: Korean hair care: இளம் தலைமுறையினர் விரும்பும் கொரியன் ஹேர் ஸ்டைல் வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

மழைக்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்கும் வழிமுறைகள்:

  • முடி உதிர்வைத் தடுக்க வேண்டும் என்றால் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • மழைக்காலங்களில் தலைமுடி பெரும்பாலும் ஈரப்பதத்துடன் இருப்பதால், வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்குக் குளிக்க வேண்டும்.
  • வாழைப்பழங்களை அரைத்துத் தலையில் தடவிக் கொள்ளவும். அரை மணி நேரத்திற்கு பிறகு தலைக்கு குளித்து விட்டால் போதும். வாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்வு பிரச்சனையைத் தடுக்கிறது.
  • தலைமுடிக்குத் தினமும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்துவது நல்லது.
  • உலர்ந்த தலைமுடி பிரச்சனை உள்ளவர்கள் 15 நாள்களுக்கு ஒருமுறை கட்டாயம் தலைமுடிக்கு தயிரைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க: Skin care: பளபளக்கும் சருமத்திற்கு ஸ்கின் கேர் மட்டும் போதாது; இந்த எளிய உணவுகளை தினந்தோறும் சாப்பிடவும்

  • தலைமுடி உதிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள், முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து தலையின் நுனி முதல் வேர் வரை அப்ளை செய்துக் கொள்ளவும். நன்கு காய்ந்தவுடன் அரை மணி நேரத்திற்குப் பின்னதாக தலையை அலச வேண்டும்.
  • அதிக கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளும் தலைமுடி உதிர்விற்கு ஒரு காரணமாக அமையும். இதைத் தவிர்த்து இயற்கையாகவே கிடைக்கும் வெந்தயம், சீயக்காய், செம்பருத்தி இலை, பூ போன்றவற்றைக் கொண்டு தலைமுடியை அலசவும்.
  • மழைக்காலங்களில் நிலவும் அதிக குளிர் காரணமாக சூடான தண்ணீரைக் கொண்டு குளிக்க நினைப்போம். இது தவறான செயல். சூடான தண்ணீர் தலைமுடியின் வளர்ச்சியைத் தடுப்பதோடு முடி கொட்டுதலுக்கு வழிவகுக்கும். எனவே கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.

  • ஊட்டச்சத்துள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொண்டாலும் தலைமுடி உதிர்வு பிரச்சனைக்குத் தீர்வாக அமையும்.

மேலும் படிக்க: Home remedy for cracked heels: பாத வெடிப்பு பிரச்சனையால் அவதிப்படுபவரா நீங்கள்? இந்த எளிய வாழ்க்கை மற்றும் உணவு முறை மாற்றங்களை பின்பற்றுங்கள்

மேற்கூறிய முறைகளைப் பின்பற்றி தினமும் தலைமுடியைப் பராமரிக்கும் போது, மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய எண்ணெய் பிசுபிசுப்பு, பூஞ்சை தொற்று, பொடுகுத் தொல்லை போன்ற பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டும். இவற்றை முதலில் தவிர்த்தாலே முடி கொட்டுதல் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்.

இந்த கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் அதைப் பகிரவும். மேலும் இதுபோன்ற கூடுதல் விபரங்களுக்கு Herzindagi வுடன் இணைந்திருங்கள்.

Image Source - Freepik

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]