Hair Loss Ayurvedic Remedies: மூன்றே வாரத்தில் முடி உதிர்வை நிறுத்தும் அற்புத ஆற்றால் கொண்ட ஆயுர்வேத வைத்தியத்தை முயற்சிக்கவும்

கொத்துக் கொத்தாய் கொட்டும் முடி உதிர்வதை நிறுத்த சிறந்த வைத்தியங்களைத் தேடுகிறீர்களானால், நிச்சயமாக இந்தக்  ஆயுர்வேத வைத்தியம் உங்களுக்கு நன்மையை அளிக்கும்
image

உடலில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு, சரியான தூக்கமின்மை, ஆட்டோ இம்யூன் நோய்கள், தைராய்டு, மன அழுத்தம், மற்றும் மோசமான ஊட்டச்சத்து ஆகியவை அதிக முடி உதிர்தலை ஏற்படுத்துகின்றன. உங்கள் வீட்டை சுற்றிப்பார்த்தலும் உங்கள் முடி உதிர்ந்து கவலை அடைய செய்கிறதா?. பொதுவாக அனைவருக்கும் தினமும் ஓரளவு முடி உதிர்தல் ஏற்படுகிறது. ஆனால் கேள்வி என்னவென்றால் முடி உதிர்தலின் அளவு. ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முடிகள் சாதாரணமானது என்று அவர்கள் கூறுகிறார்கள்! எனவே பிரச்சனை என்னவென்றால், உங்கள் முடி அதை விட அதிகமாக உதிர்வது. அல்லது, சில சேதங்களால் முடி வளர்ச்சி இல்லாதபோது. இன்றைய காலகட்டத்தில் பலருக்கு முடி நரைத்தல் மற்றும் வழுக்கை விழுதல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. இது சங்கடமாகவும், வேதனையாகவும் இருக்கலாம். எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம். உங்கள் பிரச்சனையை மிக விரைவாக தீர்க்கக்கூடிய 3 ஆயுர்வேத வைத்தியங்கள் பற்றி பார்க்கலாம்.

மூக்கில் பசு நெய் விடுவது

தூங்குவதற்கு முன் அல்லது காலையில் மூக்கில் 2 சொட்டு பசு நெய்யை வைப்பது முடி உதிர்தலை நிறுத்துகிறது. இது தவிர இது நரை முடிக்கு அதிசயங்களைச் செய்கிறது, முடி வளர்ச்சி, நினைவாற்றல், செறிவு, தூக்கம், அறிவாற்றல் மற்றும் பலவற்றை மேம்படுத்துகிறது. தலைவலி போன்ற பிற பிரச்சினைகளுக்கு அற்புதங்களைச் செய்கிறது, ஆனால் ஆயுர்வேத மருத்துவரை அணுகிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

ghee hair loss

ஊட்டச்சத்து எண்ணெய்களை தலைக்கு வைப்பது

நாம் உணவின் மூலம் பெரும்பாலான ஊட்டச்சத்தைப் பெறுகிறோம், ஆனால் அதைத் தவிர, நமது தலைமுடிக்கு உச்சந்தலையின் வழியாகவும் நேரடி ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. தேங்காய் எண்ணெய், பிரிங்ராஜ், வேம்பு, செம்பருத்தி ஆகியவற்றைக் கொண்ட முடி எண்ணெயைப் பயன்படுத்துவது மன அழுத்தம், மோசமான தூக்கம், தைராய்டு அல்லது வேறு ஏதேனும் நோய் காரணமாக முடி உதிர்தலுக்கு அதிசயங்களைச் செய்கிறது. முடிக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் அதிகப்படியான முடி உதிர்தலை ஏற்படுத்துவதாக நீங்கள் உணர்ந்தால், செம்பருத்தி, வேம்பு, பிரிங்ராஜ் போன்ற கேஷ் மூலிகைகளைக் கொண்ட முடிக்கு எண்ணெய் செய்து பயன்படுத்தலாம்.

முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தும் தேநீர்

இந்த தேநீரைக் குடிப்பதால் பித்தம் மற்றும் வாதத்தை குறைத்து தலைமுடிக்கு ஊட்டமளிக்கிறது.

முடி உதிர்வை குறைக்க தேவையான பொருட்கள்

  • கறிவேப்பிலை - 7-10
  • தண்ணீர் - 1 கிளாஸ்
  • செம்பருத்தி பூ - 1

செய்முறை

  • கறிவேப்பிலையை எடுத்து 300 மில்லி தண்ணீரில் 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  • பின்னர் தண்ணீரில் 1 செம்பருத்தி பூவைச் சேர்க்கவும்.
  • 3 நிமிடங்கள் இப்படியே விடவும்.
  • பின்னர் கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் டீயை வடிகட்டி குடிக்கவும்.
  • இந்த தேநீரை காலையில் குடிக்கலாம் அல்லது இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் குடிக்கலாம்.
curry leaf tea

இந்த செய்முறைகள் 3 வாரங்களில் முடி உதிர்தலை 25% குறைக்க உதவும். இது எந்த முன்னேற்றத்தையும் கொடுக்கவில்லை என்றால் - ஒரு ஆயுர்வேத மருத்துவரை அணுகி முடி உதிர்வுக்கு காரணத்தைக் கண்டுபிடித்து முறையாக சிகிச்சை பெறவும்.

மேலும் படிக்க: பல வழிகளில் முடியின் ஆரோக்கியத்திற்கு மந்திரங்கள் செய்யும் ஆளிவிதை ஜெல் தயாரிக்கும் வழிகள்

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP