மருத்துவர்களின் அறிவுரைப்படியே குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களில் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கின்றனர். தாய்ப்பால் எந்தளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ஆறு மாதங்களுக்கு பிறகு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கிறோம் என்பதும் முக்கியம். ஆறு மாதங்களுக்கு பிறகு தாய்ப்பாலுடன் இணை உணவுகள் கொடுப்பது அவசியம். ஏனெனில் ஆறு மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் போதாது. அதேநேரம் இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம்.
நான்கு மாதங்களுக்கு பிறகு குழந்தையின் தலை ஓரளவு ஆடாமல் நிற்கும். மெல்லும் பழக்கம் ஐந்தாவது மாதத்தில் வரும். ஆறு மாதங்களுக்கு முன்பாக குழந்தைக்கு சங்கு மூலம் வேறு உணவுகளை கொடுத்தால் துப்பி விடுவார்கள். ஆனால் அதன் பிறகு திட உணவுகளை விழுங்கும் தன்மை குழந்தைக்கு வந்துவிடும். ஏதாவது ஒரு பொருளை வாயில் வைக்க குழந்தையும் முயற்சிக்கும். எனவே இணை உணவு கொடுப்பதற்கு மிகச்சரியான தருணம் என்றால் அது ஆறாவது மாதம் தான்.
மேலும் படிங்க ஒரு வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்
மேலும் படிங்க ஒன்பது மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]