உங்கள் குழந்தைகளிடம் பொய் சொல்கிறீர்களா? விளைவுகள் என்ன தெரியுமா?

குழந்தைகளிடம் சொல்லும் சாதாரண பொய்களால் ஏற்படும் அதீத விளைவுகளை விரிவாக பார்க்கலாம்.

child lying issue

பெற்றோரின் சிக்கலான உலகில் நேர்மையாக இருப்பதற்கும், நம் குழந்தைகளை பேணி பாதுகாப்பதற்கும் இடையே உள்ள சூழ்நிலை என்பது இறுக்கமான கயிற்றில் நடப்பது போல் இருக்கும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாக்க கடினமான சூழ்நிலைகளை எளிதாக்குவதற்கு பாதிப்பில்லாத பொய்களை அடிக்கடி பயன்படுத்துகின்றனர் இப்போது உள்ள நவநாகரிக காலத்தில் பாதிப்பில்லாத பொய்கள் குழந்தையின் உணர்ச்சி மற்றும் உளவியல் வளர்ச்சியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பெற்றோர்களிடம் நேர்மை முக்கியம்

குழந்தைகள் பெற்றோர்களை பெரிதும் நம்புகிறார்கள்.ஏனென்றால் குழந்தைகள் அறிவு மற்றும் வழிகாட்டுதல்களில் பெற்றோர்களை சிறந்த ஆலோசர்களாக பார்க்கிறார்கள்.காலப்போக்கில், கணிசமான அல்லது வழக்கமான நேர்மையற்ற செயல்களில் ஈடுபடும் பெற்றோரால் குழந்தைகளின் நம்பிக்கை பாதிக்கப்படலாம்.

இளம் வயதிலேயே குழந்தைகளுடன் நம்பிக்கையை உருவாக்க நிறுவுவதற்கு அதிக மதிப்பு கொடுக்க வேண்டும்.தொடர்ந்து பெற்றோர்கள் பொய் சொல்வது குழந்தைகளின் நம்பிகையை அசைத்து, குழந்தைகளின் வயது அதிகரிக்கும் போது நம்பிகையான உறவுவை சீர்குலைக்கும்.

சிறுசிறு பொய்களும் தாக்கத்தை ஏற்படுத்தும்

சிறிய பொய்கள் பெரிதாக தெரியவில்லை என்றாலும், ஒரு குழந்தை உலகைப் பார்க்கும் விதத்தில் அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சாண்டா கிளாஸைப் பற்றி உருவாக்கப்பட்ட கதைகள், ஒரு போதும் கிடைக்காத பொம்மையை குழந்தைக்கு கிடைக்கும் என்று உறுதியளிக்கும் அப்பாவித்தனமான பொய்கள் குழந்தைகளுக்கு சந்தேகம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும். இந்த முரண்பாடுகள் குழந்தையின் தார்மீக திசைகாட்டியை சிதைக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதால், பெற்றோர்கள் குழந்தைகளிடம் சொல்லும் தகவல்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நேர்மையான தகவல்களை பேச விரும்பும் குழந்தைகள் நாம் எப்போது சிறப்பாக பேச வேண்டும் அப்போது தான் நமக்கு பாராட்டு கிடைக்கும் என்பதில் குழந்தைகள் நம்பிக்கையாக இருப்பார்கள்.

child growth tips

ஆரோக்கியமான அணுகுமுறை அவசியம்

உண்மைத்தன்மையை முன்மாதிரியாகக் கொண்டு பெற்றோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தங்கள் சொந்த நடவடிக்கைகள் மற்றும் முடிவுகளைப் பற்றி உண்மையாக இருப்பதன் மூலம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளில் ஒருமைப்பாட்டின் உணர்வைத் தூண்டலாம், சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் முடிவெடுப்பதற்கும் ஆரோக்கியமான அணுகுமுறையை உருவாக்கலாம்.

குழந்தைகளின் உணர்ச்சி நல்வாழ்வை அவர்கள் குடும்பத்தில் சந்திக்கும் பொய்களால் கணிசமாக பாதிக்கப்படலாம். தொடர்ச்சியான ஏமாற்றுதல் குழந்தைகளில் அதிகரித்த மன அழுத்தம், பதட்டம் மற்றும் துரோகம் போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.

நேர்மையான உரையாடல் நுண்ணறிவை வளர்க்க உதவும்

கடினமான தலைப்புகளில் வயதுக்கு ஏற்ற நேர்மையுடன் உரையாடுவது, குழந்தைகள் உணர்ச்சி நுண்ணறிவை வளர்க்கவும், வாழ்க்கையின் சவால்களை கையாள்வதற்கு அவசியமான வழிமுறைகளை உருவாக்கவும் உதவும்.

பெற்றோர்களான நமக்கு ஏற்பட்ட ஒரு ஏமாற்றத்தை குறைக்க, குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் நேர்மையாக பேசி குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். கேள்விகளைக் கேட்க குழந்தைகளை ஊக்குவிப்பதன் மூலமும்,அவர்களுக்கு வெளிப்படையான, வயதுக்கு ஏற்ற பதில்களைக் கொடுப்பதன் மூலமும் நம்பிக்கையின் அடித்தளத்தை நிறுவ முடியும்.

ஒரு குழந்தையின் சரளமான பேச்சை பாராட்டி, அவர்களின் எண்ணங்களையும், கவலைகளையும் பகிர்ந்து கொள்ள வசதியாக இருக்கும் சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP