மாடி தோட்டத்தில் அமோகமான வெண்டை விளைச்சல் பெறுவதற்கான வழிகள்

வீட்டின் மாடித் தோட்டத்தில் வெண்டைச் செடி வளர்க்க விரும்பமா ? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவும். மண் கலவை, பயன்படுத்த வேண்டிய பூச்சி மருந்து, உரம் உள்ளிட்ட விவரங்கள் இங்கு பகிரப்பட்டுள்ளன. இந்த குறிப்புகளை பின்பற்றினால் 40 நாட்களில் வெண்டை சாகுபடி செய்யலாம்.
image

வெண்டைச் செடி ஒரு கோடை கால பயிராகும். குறைந்தது எட்டு மணி நேரம் சூரிய ஒளி படும் இடத்தில் இதை வளர்க்க வேண்டும். எந்தவொரு செடியுமே ஆரோக்கியமாக வளர்ந்து நல்ல அறுவடையை தருவதற்கு சரியான மண் கலவையும் தரமான விதையும் தேவை. வெண்டை வளர்ப்புக்கு ph மதிப்பு 6-6.5 ஆகும். தலா ஒரு பங்கு செம்மண், தொழு உரம், கோகோ பீட், தலா ஒரு கைப்பிடி வேப்பம் புண்ணாக்கு, சாம்பல், ஒரு டீஸ்பூன் சுண்ணாம்பு சேர்த்து மண் கலவை தயாரிக்கவும். எப்போதுமே விதை தேர்வில் நாட்டு விதைக்கு முன்னுரிமை அளிக்கவும். வெண்டை செடியை பொறுத்தவரை நாற்று விட்டு வளர வேண்டிய அவசியமில்லை. விதைகளை நேரடியாகவே மண்ணில் விதைக்கலாம். 4-5 நாட்களில் விதைகள் முளைக்க தொடங்கும்.

lady finger

வெண்டை வளர்க்கும் முறை

வெண்டை செடி வளர்ப்புக்கு நிறைய தண்ணீர் தேவைப்படும். எனவே காலை, மாலை நேரங்களில் தண்ணீர் ஊற்றவும். வெண்டை வளரும் மண் காயந்து விடக் கூடாது. தண்ணீர் போதுமான அளவு ஊற்றாதபட்சத்தில் பூ உதிர்வு ஏற்படும், பிஞ்சு பிடிக்காது, செடி வளராது. வீட்டில் உள்ள காய்கறி கழிவுகளை ஐந்து நாட்களுக்கு தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி வெண்டை தொட்டியில் ஊற்றலாம். வெண்டை செடியை மாடித் தோட்டத்தில் வளர்க்கும் போது அதிகப்படியான கவனம் தேவை.

பூச்சி தாக்குதல் தடுப்பு

  • வெண்டை செடியை நிறைய பூச்சிகள் தாக்கும். விளை முளைத்து இலை விட்ட சில நாட்களில் மாவுப்பூச்சி தாக்கும். இலையில் அடிப்புறம் இதை காணலாம். இதற்கு ஐந்து மில்லி லிட்டர் வேப்பெண்ணெயை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடி மீது தெளிக்கவும். ஒரு வாரம் இப்படி செய்தால் பூச்சிகள் வராது.
  • வேப்பெண்ணெய் தெளிப்பை தவற விட்டு பூச்சிகள் வந்துவிட்டால் வேப்பம் புண்ணாக்கு ஒரு கைப்பிடி, 20 பல் பூண்டை நசுக்கி இரண்டையும் தண்ணீரில் ஊறவிட்டு இரண்டு நாட்கள் கழித்து மாலை நேரத்தில் தெளிக்கவும்.
  • வேர் அலுகல் நோய் வராமல் தடுக்க வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்தவும். செடியில் எறும்பு பாதிப்பை தடுக்க வேப்ப எண்ணெய், மஞ்சள் கலந்து மண் மீது தூவவும்.
  • பூக்களின் நுனியில் சாறு உறிஞ்சி பூச்சிகளின் முட்டை இருந்தால் செடியின் சத்து போய்விடும். தமிழக தோட்டக்கலைத்துறையில் வெண்டை செடிக்கான அமிலத்தை வாங்கி முறையாக பயன்படுத்துங்கள்.

வெண்டை சாகுபடி

30-40 நாட்களில் வெண்டைச் செடியில் பூக்கள் பூக்க தொடங்கும். மஞ்சள் நிறத்தில் இருக்கும். மகரந்த சேர்க்கையில் பிரச்னை இருக்காது. வாரம் ஒரு முறை புளித்த மோரை ஸ்ப்ரே செய்யுங்கள். இதுவே வெண்டைச் செடியின் உரமாகும். பூ பூத்த 10-12 நாட்களில் வெண்டைக் காய் பறிக்கலாம். இரண்டு மாதத்திற்கு வெண்டைச் செடி காய் கொடுக்கும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP