தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட எதுவும் திட்டம் உள்ளதா? இதோ உங்களுக்காகவே தமிழகத்தில் கலாச்சாரம் மற்றும் பராம்பரியம் நிறைந்த சிறந்த இடங்கள் என்னென்ன? என்பது குறித்து நீங்களும் இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.
பொங்கல் கொண்டாட்டத்திற்கு ஏற்ற டூரிஸ்ட் ஸ்பார்ட்!
மேலும் படிங்க:போகிப்பண்டிகை குறித்த சுவாரஸ்சிய வரலாறு!
மதுரை:
பொங்கல் திருநாள் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வரக்கூடிய இடம் என்றால் நிச்சயம் மதுரையாகத் தான் இருக்க முடியும். வீரர்களையும், காளைகளையும் பெருமைப்படுத்தக்கூடிய ஜல்லிகட்டு போட்டிகளைக் காண்பதற்காகவே ஏராளமான மக்கள் இங்கு வருகை தருவார்கள். உங்களது குழந்தைகளுக்கு பராம்பரியத்தைச் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் என்றால் மதுரை உங்களுக்கு நல்ல தேர்வாக அமையும். ஜல்லிக்கட்டு குறித்து வரலாறுகளையும் உங்களது குழந்தைகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கவும் நல்ல வாய்ப்பாக அமையக்கூடும்.
ஒருவேளை உங்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லாம். இதோடு மட்டுமின்றி தமிழக சுற்றுலாத்துறை சார்பில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக பொங்கல் சுற்றுலா ஏற்பாடுகளை மேற்கொள்ளும். குறிப்பாக கிராம பயணங்கள், பரதநாட்டியம், கரகாட்டம் என தமிழர்களின் பண்டைய நாகரிகம் போன்றவற்றை நாம் அறியக்கூடிய வகையில் இந்த பயணங்கள் அமையக்கூடும்.
தஞ்சாவூர்:
மதுரையையடுத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சிறந்த இடம் என்றால் அது தஞ்சாவூர் தான். நெல் விளைச்சலுக்குப் புகழ்பெற்ற தஞ்சாவூரில் உழவர்கள் மிகவும் விமர்சியாக தை திருநாளைக் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு கிராமங்களிலும் விதவிதமான அலங்காரங்கள், வண்ணமயமானக் கோலங்கள் மற்றும் பராம்பரிய முறைகள் அனைத்தையும் இவ்விழாவில் இடம் பெறும். எனவே நீங்கள் பொங்கல் குறித்த புதிய அனுபவத்தைப் பெற வேண்டும் என்றால் தஞ்சாவூர் செல்லுங்கள்.
இதோடு மட்டுமின்றி மாட்டுப்பொங்கல் தினத்தன்று புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலுக்குச் செல்லுங்கள். அங்கு கோயிலில் பூஜைக்காக உரிமையாளர்கள் பல பசுக்களை வரிசையாக நிற்பதைப் பார்க்கும் போதே நமது கண்களுக்கு விருந்தாகவே அமையும். மேலும் இத்திருவிழாவில் கிராமப் பயணம், பாராம்பரிய விளையாட்டுகள், மாட்டு வண்டி பந்தயம், நாட்டுப்புற நடனங்கள் அனைத்தும் தஞ்சையில் பல கிராமங்களில் நடைபெறும்.
சேலம்:
தை திருநாளை என்றாலே உழவுக்கு உறுதுணையாக இருக்கும் காளைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக உள்ளது. ஆனால் சேலம் மாவட்டத்தில் கொஞ்சம் வித்தியாசமாக நரியைக் கடவுளாக வணங்குகின்றனர் மக்கள். கூண்டில் அடைக்கப்பட்டுள்ள நரியை ஊர்வலமாக வீதிகளில் மேளதாளத்துடன் கொண்டுவருகின்றனர். பெண்களும் ஆரத்தி எடுத்து வழிபடுகிறார்கள. தை மாத்தில் புதிய விளைச்சல் ஆரம்பிப்பதற்கு முன்னதாக நரி முகத்தில் விழித்தால் நல்ல யோகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் நரி முகத்திருவிழா நடைபெறுவது இங்கு வழக்கமாக உள்ளது. தைத்திருநாளில் புதிய அனுபவத்தை நீங்கள் பெற வேண்டும் என்றால் சேலத்திற்கு கொண்டு கொஞ்சம் சென்று வாருங்கள்.
கோவை:
கொங்கு மண்டலமான கோவையில் ரேக்ளா ரேசுடன் தைத் திருநாள் கோலாகலமாக நடைபெறும். பண்டிகைக்காலத்தில் ஆடைகள் வாங்க வேண்டும் என்றால் உங்களுக்கு சிறந்த தேர்வாக கோவை கண்டிப்பாக அமையக்கூடும். கோயம்புத்தூர் வருகையின் போது அழகிய கோயில்கள் மற்றும் பாரம்பரிய கிராமங்களுக்குச் சென்று பொங்கலின் போது கிராமிய வசீகரத்தையும் துடிப்பான பண்டிகையையும் அனுபவிக்கலாம்.
பொள்ளாச்சி:
மண்ணின் மணம் மாறாத பொள்ளாட்சி பொங்கல் பண்டிகையைக் கொண்ட சிறந்த இடமாக அமைகிறது. இங்குள்ள சுற்றுச்சூழல் உங்களது மனதை இனிமையாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க கண்டிப்பாக உதவக்கூடும்.
மேலும் படிங்க:தைத்திருநாளும் புகழ்பெற்ற கும்பகோணம் பித்தளை பாத்திரங்களும்!
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation