நம் தோல் ஆரோக்கியமாகவும் பிரகாசமாகவும் இருக்க வெளிப்புற பயன்பாட்டு பொருட்கள் மட்டும் போதாது. தோலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், தோலைத் தூய்மைப்படுத்தும் டீடாக்ஸ் முறைகள், இறந்த செல்களை அகற்றுதல் மற்றும் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து பாதுகாப்பது ஆகியவை மிகவும் அவசியம். நம் சருமத்தில் முகப்பபரு, கரும்புள்ளிகள், தோல் வறட்சி, அதிக எண்ணெய் சுரப்பு போன்ற பல பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்படலாம். இவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தி, தோலை பிரகாசமாக வைத்திருக்க டீடாக்ஸ் செய்வது அவசியம். இதற்கு இரண்டு வழிகள் உள்ளன: உணவு மூலம் டீடாக்ஸ் செய்தல் மற்றும் ஸ்கிரப் போன்றவற்றால் எக்ஸ்ஃபோலியேட் செய்தல். அந்த வரிசையில் சருமத்தை ஜொலிக்க வைக்க உதவும் டீடாக்ஸ் பானங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
தோலை டீடாக்ஸ் செய்ய 5 காலை பானங்கள்:
மஞ்சள் டீடாக்ஸ் பானம்:
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இது பருக்களைக் குறைத்து, காயங்களை ஆற்றுகிறது. மேலும், தோல் அழற்சி மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
தயாரிப்பு முறை:
- 2-3 கப் தண்ணீரில் மஞ்சள் கிழங்கு/ மஞ்சள் பொடியை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- கொதித்த பின் இதை ஆற வைத்து, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து வெதுவெதுப்பாக குடிக்கவும்.
- ஒரு நாளைக்கு 2 கப் அளவு பருகலாம். இதை தினமும் காலை வெறும் வயிற்றில் மற்றும் இரவில் தூங்கும் முன் குடித்து வரலாம்.
வைட்டமின் சி டீடாக்ஸ் பானம்:
வைட்டமின் சி நிறைந்த இந்த பானம், தோல் பிரச்சினைகளைத் தடுக்கவும் குணப்படுத்தவும் உதவுகிறது. இது வயதான தோற்றத்தைத் தடுக்கும் திறன் கொண்டதால், தோலிலுள்ள நச்சுகளை நீக்கி பிரகாசத்தை அதிகரிக்கிறது.
தயாரிப்பு முறை:
- ஒரு ஜாடியில் தண்ணீரில் எலுமிச்சை, அன்னாசி, கிவி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை இரவில் ஊற வைக்கவும்.
- காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இதை குடிக்கவும்.
பச்சை ஜூஸ்:
பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களால் செய்யப்பட்ட இந்த ஜூஸ், தோலிலுள்ள கழிவுகளை நீக்கி டீடாக்ஸ் செய்கிறது. இதனால் தோல் தூய்மையாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.
தயாரிப்பு முறை:
- கீரை, பச்சை ஆப்பிள், வெள்ளரி, இஞ்சி மற்றும் சிறிது தண்ணீரை மிக்ஸியில் அரைத்து ஜூஸ் செய்யவும்.
- இதில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும்.
மாதுளை ஜூஸ்:
மாதுளையில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் தோலின் மாசுகளை நீக்கி புதிய பிரகாசத்தைத் தருகின்றன. இதில் உள்ள லைகோபின் கருமை மற்றும் வயதான தோற்றத்தைத் தடுக்கிறது.
தயாரிப்பு முறை:
- மாதுளை முத்துகளை அரைத்து, தேவையானால் தண்ணீர் சேர்த்து ஜூஸ் செய்யவும்.
- காலையில் வெறும் வயிற்றில் இதை குடிக்கவும்.
மேலும் படிக்க: கருவளையங்களுக்கு குட்பை சொல்லுங்க; காபி கண் மாஸ்க் ட்ரை பண்ணி பாருங்க
தர்பூசணி - வெள்ளரி - துளசி ஜூஸ்:
இந்த மூன்று பொருட்களால் செய்யப்பட்ட ஜூஸ், தோலின் எண்ணெய் சுரப்பை சீராக்குகிறது. இதில் உள்ள ஆன்டி இன்பிளமேட்டரி குணங்கள் தோலை இளமையாக வைக்கின்றன.
தயாரிப்பு முறை:
- அரை கப் தர்பூசணி, பாதி வெள்ளரி, சிறிது துளசி இலைகளை அரைத்து வடிகட்டவும்.
- இதில் எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் குடிக்கவும்.
- ஒரு வாரத்தில் தோல் பிரகாசம் அதிகரிக்கும்.
Image source: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation