முகத்தின் அழகை குறைக்கும் கருவளையங்கள் (டார்க் சர்கிள்ஸ்) பலருக்கும் பெரும் தொல்லையாக உள்ளது. தூக்கமின்மை, மன அழுத்தம், இரத்த சோகை, அதிக நேரம் மொபைல் ஸ்கிரீன் பார்ப்பது, டிவி பார்ப்பது, அதிக நேரம் லேப்டாப்பில் வேலை செய்வது போன்றவை கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்பட முக்கிய காரணங்கள். அதே போல மரபணு மாற்றங்கள், மோசமான வாழ்கை முறை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளும் இதற்கு காரணம். முன்பெல்லாம் 40+ வயதினருக்கு மட்டுமே இருந்த இந்த பிரச்சனை, இன்று இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கும் உள்ளது. இந்த காலத்து இளைஞர்கள் இரவில் சரியாக தூங்குவதே இல்லை. இதனால் கூட கருவளையம் ஏற்படும். ஆனால் கவலைப்பட வேண்டாம். இந்த கருவளையங்களை தடையமே இல்லாமல் நீக்க உதவும் ஒரு இயற்கை வைத்தியம் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஆரோக்கியமான உணவு மற்றும் சரியான பராமரிப்பு மூலம் கருவளையத்தை குறைக்கலாம். அந்த வரிசையில் ஆமணக்கு எண்ணெய் காபி மாஸ்க் ஒரு சிறந்த தீர்வு. இதை 3 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் கருவளையம் மேஜிக் போல மறைந்துவிடும்.
உங்களுக்கு கண்களில் எரிச்சல் இருந்தால் இந்த மாஸ்க் பயன்படுத்த வேண்டாம். அதே போல முதல் முறையாக பயன்படுத்தும் முன், சிறிதளவு சருமத்தில் பூசி பாட்ச் டெஸ்ட் செய்து பரிசோதிக்க வேண்டும்.
Image source: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]