முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீங்கி ஒரே வாரத்தில் பளபளக்கச் செய்ய வீட்டு வைத்தியம்

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளின் பிரச்சனையால் வெளியில் செல்ல அசிங்கப்படுகிறீர்கள் என்றால் இந்த வீட்டு வைத்தியங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதன் உதவியுடன் நீங்கள் ஒரே வாரத்தில் கரும்புள்ளிகளைச் சுத்தம் செய்யலாம்.
image

பொதுவாக முகத்தில் பல்வேறு வகையான சருமப் பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு மாசுபாடு, ஹார்மோன் சமநிலையின்மை, வானிலை மாற்றங்கள் போன்ற பல காரணங்கள் இருக்கலாம். பெண்களுக்கு ஏற்படும் சில பொதுவான பிரச்சனைகள் பருக்கள், கரும்புள்ளிகள், வறட்சி, தோல் பதனிடுதல் போன்றவை. கிட்டத்தட்ட அனைவரும் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த பிரச்சனைகளில் ஒன்று கரும்புள்ளிகள். இவை நம் முகத்தின் மூக்கு, நெற்றி மற்றும் கன்னத்தில் காணப்படுகின்றன.

முகத்தில் அதிகப்படிய மூக்கைச் சுற்றி அதிகமாக கரும்புள்ளிகள் தோன்றும். முகத்தில் உள்ள இந்த சிறிய கருப்பு புள்ளிகள் அசிங்கமாகத் தெரிகின்றன. இதுபோன்ற நிலையில் அவற்றை அகற்றுவது அவசியம். பொதுவாக சருமத்தின் தூசி, மண் மற்றும் இறந்த சரும செல்களால் அடைக்கப்படும்போது கரும்புள்ளிகள் உருவாகின்றன. இதனால் அவ்வப்போது மக்கள் ஸ்க்ரப் போன்றவற்றின் உதவியுடன் அவற்றை அகற்றிக்கொண்டே இருப்பார்கள். இல்லையெனில், அவை சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். சிலர் அவற்றை அகற்ற விலையுயர்ந்த சிகிச்சைகளையும் நாடுகிறார்கள். அதிம் பணம் செல்வழிக்கமால் உங்களுக்கும் கரும்புள்ளிகள் பிரச்சனை இருந்தால், இன்று இந்தக் கட்டுரையில் அழகு நிபுணர் ரேணு மகேஸ்வரி பரிந்துரைத்த சில வீட்டு வைத்தியங்களை நாங்கள் உங்கள் பிரச்சனையை நீக்க வீட்டு வைத்தியம்.

தக்காளி மற்றும் சர்க்கரை ஃபேஸ் ஸ்க்ரப்

  • இதற்கு முதலில் ஒரு தக்காளியை எடுத்து இரண்டு பகுதிகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
  • இப்போது நீங்கள் தக்காளியின் பாதி பகுதியில் சர்க்கரையை தடவ வேண்டும்.
  • இதன் பிறகு கரும்புள்ளிகள் உள்ள பகுதியை மெதுவாக மசாஜ் செய்யவும்.
  • மேலும் சிறிது நேரம் இப்படி உலர விட வேண்டும்.
  • சிறிது நேரம் கழித்து கரும்புள்ளிகள் மேலே வருவதை உங்களால் உணர முடியும்.
  • அதன்பிறகு அதை ஒரு பருத்தி துணியால் சுத்தம் செய்து தண்ணீரில் கழுவவும்.

tomato sugar

அரிசி மற்றும் ஆலிவ் எண்ணெய் ஃபேஸ் ஸ்க்ரப்

  • பச்சை அரிசியை எடுத்து நன்றாக அரைத்து மாவு எடுத்துக்கொள்ளவும்.
  • இப்போது ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி அரைத்த அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இதனுடன் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • இந்த பேஸ்ட்டை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.
  • இதை இப்படியே சிறிது நேரம் விட்டுவிட்டு பருத்தி அல்லது வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
  • அரிசி மாவு சருமத்தை உரிக்க உதவுகிறது.
rice face flour 1

மேலும் படிக்க: சுருக்கங்களுடன் வயதான தோற்றத்தில் இருக்கும் முகத்தை இளமையாக வைத்திருக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்


இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP