நாம் அனைவரும் நீண்ட மற்றும் அடர்த்தியான முடியை விரும்புகிறோம். அதனால்தான் நாம் சில நேரங்களில் விலையுயர்ந்த சிகிச்சைகளைபாலருக்குச்சென்று எடுத்துக்கொள்கிறோம் . ஆனால் சிகிச்சையின் போது எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு மட்டுமே முடியில் தெரியும். அதன் பிறகு முடி ஊட்டச்சத்தை இழக்கத் தொடங்குகிறது. இதுபோன்ற நிலைகளில் முடி உதிர்வதைத் தடுக்க படிகாரத்தைப் பயன்படுத்துங்கள். படிகாரம் சருமத்திற்கு மட்டுமின்றி கூந்தலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. படிகார கற்கலை முயற்சி செய்த பிறகு உங்கள் கூந்தலில் நடக்கும் மாற்றத்தை உணர்வீர்கள்.
கூந்தலுக்கு படிகாரத்துடன் தேங்காய் எண்ணெயை தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்
தலைமுடிக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது வழக்கத்தில் இருக்கும் ஒன்று. இது தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, கூந்தலுக்கு சிறந்த தேப்வாக எண்ணெய் இருக்கிறது. இதில் கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் முடியை நீண்ட நேரம் பளபளப்பாக வைத்திருக்கும். இதனை உச்சந்தலையில் தடவினால் முடி வலுவடையும். மறுபுறம் படிகாரத்தின் பயன்பாடு முடி உதிர்வைக் குறைக்கிறது. இதில் ஆண்டிசெப்டிக் பண்புகள் உள்ளதால் முடியை பலப்படுத்த உதவுகிறது. இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து தடவினால் முடி உதிர்தல் பிரச்சனை குறையும்.
படிகாரம் மற்றும் தேங்காய் எண்ணெய் முடிக்கு தடவும் முறைகள்
மேலும் படிக்க: பார்லருக்கு போகாமல் 10 ரூபாயில் விலையுயர்ந்த ஹேர் ஸ்பாவை வீட்டிலேயே செய்யலாம்
- தலைமுடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் மாற்ற விரும்பினால் சிறிது தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
- இப்போது அதனுடன் 1/2 டீஸ்பூன் படிகாரத் தூள் சேர்க்கவும்.
- அதன் பிறகு இந்த இரண்டு பொருட்களையும் குறைந்த தீயில் வைத்து காய்ச்ச வேண்டும்
- எண்ணெய் நங்கு சூடு வந்தது எடுத்து ஆறவிடவும்.
- பின்னர் அதை ஒரு ஜாடியில் எடுத்து சேமித்துக்கொள்ளவும். அதன் பிறகு தலைமுடியில் தடவவும்.
- அதை உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்யவும்.
- பின்னர் உங்கள் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும்.
- இவ்வாறு செய்வதன் மூலம் முடி உதிர்வது நின்றமதை நீங்க உணர தொடங்கிவீர்கள்.
படிகாரம் பூசுவதற்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
- தலைமுடிக்கு படிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
- முடியின் அமைப்பைக் கருத்தில் கொண்டு இந்த இரண்டின் கலவையைப் பயன்படுத்துங்கள்.
- படிகாரம் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒரே இரவில் முடியில் தடவ வேண்டாம்.
- மருத்துவர் கூறும் இந்த வழிகளில் படிகாரத்தைப் பயன்படுத்தினால், முடி உதிர்வது குறையும்.
மேலும் படிக்க: பலவித சேதங்களை சந்தித்து மோசமாக இருக்கும் கூந்தலை இந்த ஷாம்பூவை கொண்டு குணப்படுத்தலாம்
குறிப்பு: உங்கள் தலைமுடிக்கு எதையும் பயன்படுத்துவதற்கு முன் ஒரு நிபுணரின் ஆலோசனையைப் பெறவும். மேலும் உங்கள் தலைமுடி அமைப்பில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation